புதிய ஏற்பாடு வேத பாடம்

களைகளைப் பற்றிய உவமை: மத்தேயு 13:24-30

இயேசு பரலோகராஜ்ஜியம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷருக்கு ஒப்பாயிருக்கிறது என்றார். பயிரானது வளர்ந்து கதிர்விட்ட போது களைகளும் சேர்ந்தே வளருகிறதைப் பார்க்கிறோம். வீட்டெஜமானுடைய வேலைக்காரன் அவனிடத்தில் வந்து “ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்.” அதற்கு அவன் சத்துரு தான் அதைச் செய்கிறான் என்றான். வேலைக்காரனோ அதைப் பிடுங்கிப் போட உத்தரவு கேட்ட போது எஜமான் அறுப்புகாலம் வரை அதை வளர விடுங்கள் என்றும் அறுப்புக் காலத்திலோ களைகளைப் பிடுங்கி முதலாவது அவைகளை சுட்டெரிக்கிறதற்கு கட்டுகளாகக் கட்டுங்கள் என்றும், கோதுமையை களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்றும் கூறினான்.

தேவனுடைய வார்த்தைகளை மக்கள் மத்தியில் விதைக்கிறவர்கள் விதைக்கும் போதே தவறான போதனைகளை அவர்கள் மத்தியில் விதைக்கின்றனர். இந்த உவமையில் வயல் என்பது இந்த உலகத்துக்கு ஒப்பிடப்பட்டுள்ளது. நல்ல விதை என்பது தேவராஜ்ஜியத்தில் இருக்கும் உத்தம விசுவாசிகளைக் குறிக்கிறது. களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்களைக் குறிக்கிறது. நற்செய்தியும் உண்மையான விசுவாசிகளும் உலகம் முழுவதும் நாட்டப்படும் போது சாத்தானும் தன்னைப் பின்பற்றுகிற பிள்ளைகளை தேவனுடைய மக்கள் மத்தியில் தேவனுடைய சத்தியத்திற்கு எதிராக கிரியை நடப்பிக்கும்படி நாட்டி வைப்பான்.
சாத்தானுடைய தூதர்களின் முக்கிய பணி தேவனுடைய வார்த்தையின் அதிகாரத்தை கெடுப்பதாகும். (ஆதி 3:4)  மேலும் அநீதி, அக்கிரமம், தீமைகள், ஆகியவற்றை ஊக்குவித்து தவறான உபதேசங்களை பரப்புவதும் அவனுடைய செய்கைகளாகும். (அப்      20:29. 30  2 2:7,12) தீமை செய்கிற சாத்தானின் பிள்ளைகளை மட்டும் அழித்திட கடைசி காலம் வரைக்கும் தேவன் உத்தரவு கொடுக்க மாட்டார்.

நாம் நம் இதயமாகிய நல்ல நிலத்தில் நல்ல உபதேசங்களைக் கேட்டு அதன்படி நடக்கப் பிரயாசப்படுவோம்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago