புதிய ஏற்பாடு வேத பாடம்

இயேசு கூறிய விதைக்கிறவனைப் பற்றிய உவமை: மத்தேயு 13:1-23 மாற்கு 4:1- 20 லூக்கா 8:4-15

இயேசு மக்களுக்கு அறிவிக்கப்படும் நற்செய்தி அவர்களால் எப்படி ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை விளக்கும்படி இந்த உவமையைக் கூறினார். இதில் மூன்று உண்மைகளைக் கற்றுக் கொள்ளலாம்.

  1. கர்த்தருடைய வார்த்தையை ஒருவர் எப்படி ஏற்றுக் கொள்ளுகிறார் என்பதை பொறுத்து மனந்திரும்புதலும், கனிதருதலும் அமையும் – யோ 14:1-10
  1. நற்செய்தியைக் கேட்டும் அது பலருக்குப் புரியாது – மாற் 4:15 வேறு சிலர் நற்செய்தியைக் கேட்டு விசுவாசித்து மனந்திரும்புவார்கள். ஆனால் சிறிது காலத்திற்குள் விசுவாசத்தை விட்டுப் பின்வாங்கிப் போவார்கள் – மாற்  4:16-19
  1. இன்னும் சிலர் நற்செய்தியைக் கேட்டு விசுவாசித்து, மனந்திரும்பி நற்கனிகளைத் தருவார்கள் – மாற் 4:20

தேவனுடைய வார்த்தையின் எதிரிகள் யாரென்றால் சாத்தான், உலகக்  கவலைகள், ஐசுவரியம், இன்பங்கள் ஆகியவை. சிலர் வசனத்தைக் கேட்டு அரைகுறையாக மனந்திரும்புவார்கள். இவர்கள் பாவமன்னிப்பை  வேண்டுகிறார்கள், ஆனால் ஆவியின் அனுபவம் இவர்களிடம் இல்லை. இவர்கள் இரட்சிப்பையும், மறுபிறப்பின் அனுபவத்தையும் பெற்றுக் கொள்வதில்லை. விசுவாசிகளோடு இணைந்து ஐக்கியப்படுவதுமில்லை. உலகத்திலிருந்து பிரிந்து பரிசுத்த வாழ்வு வாழ்வதுமில்லை.

வழியருகே விதைக்கப்பட்டவன் கவனமின்றி வாழ்கிறான். கற்பாறை   இடங்களில் விதைக்கப்பட்டவன் முற்றிலும் ஒப்புக்கொடாதவன், எளிதில் பின்மாற்றமடைகிறவன். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன் சரியானவற்றிற்கு முக்கியத்துவம் தராதவன். நல்ல நிலத்தில் விதைக்கப் பட்டவனோ, நன்றாக வசனத்தைக் கேட்டு மனதில் ஆழமாகப் பதித்து நூறாகவும், அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தருகிறவன் என்றார்.

இந்த உவமை நாம் எங்கே விதைக்க வேண்டும், நமது காணிக்கைகளை யாருக்கு, எதற்குக் முன்னுரிமை அளித்துக் கொடுக்க வேண்டும் என்றும் கற்றுக் கொள்கிறோம். ஆத்துமா ஆதாயம் செய்யும் ஊழியங்களுக்கும், ஆவியின் வரங்களும், ஆவியின் கனியும் காணப்படும் ஊழியங்களுக்கும் முன்னுரிமை அளித்து அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

இதிலிருந்து  நாம் கற்றுக்கொண்டது என்னவெனில் நம் உள்ளத்தை நல்ல நிலமாக வைத்து, தேவவசனங்களை நம் உள்ளத்தில் ஆழமாகப் பதித்து தேவராஜ்ஜியத்துக்குப் பலன் தருகிறவர்களாக மாறுவோம்.   

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

4 weeks ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

9 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

9 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

9 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

9 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

9 months ago