புதிய ஏற்பாடு வேத பாடம்

உறுதி விடாத விதவை அல்லது கடுமையான நியாயாதிபதி பற்றிய உவமை – லூக் 18 : 1 – 8

இயேசு ஜனங்களுக்கு இந்த உவமையைக் கூறினார். ஒரு பட்டணத்தில் தேவனுக்குப்
பயப்படாத மனிதனை மதியாத ஒரு நியாயாதிபதி இருந்தான். அந்த பட்டணத்தில் ஒரு
விதவை தனக்கும் தன் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் நியாயஞ்செய்ய ஓயாமல் அவனைத் தொந்தரவு செய்தாள். அவள் அடிக்கடி தொந்தரவு செய்ததால் “இவளுக்கு நியாயஞ்செய்ய வேண்டுமென்று” தனக்குள்ளே சொல்லிக் கொண்டு அவளுக்கு நியாயம் விசாரித்தான். ஜெபத்திற்கு பதில் கிடைக்க காலதாமதமானால் சோர்ந்து போகக்கூடாது. தேவனை நோக்கி இரவும், பகலும் கூப்பிடுகிறவர்களின் விஷயத்தில் நீடியபொறுமையுட னிருந்து தேவன் சீக்கிரத்தில் நியாயஞ்செய்வார். பயம், சந்தேகம், சோர்வு ஆகியவற்றை விட்டுவிட்டு உரிமையோடு விடாமல் கேளுங்கள். தோல்வி என்ற எண்ணத்தை அகற்றி பதில் வரும் என்ற விசுவாசத்தோடு, உறுதியோடு கேளுங்கள்.

இதிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடம் என்னவெனில் இயேசு வரும்வரை இடைவிடாமல் ஜெபித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படிப் பட்டவர்களை இயேசு வரும்போது உலகத்தில் அனுபவித்த துன்பம், பாடுகள் அனைத்துக்கும் முடிவுகட்டி தம்மோடு சேர்த்துக்கொள்வார்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

3 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

3 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

3 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

3 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

3 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

3 months ago