புதிய ஏற்பாடு வேத பாடம்

லூக்கா சுவிசேஷ புத்தகத்தின் முன்னுரை

லூக்கா என்ற பெயரின் பொருள் பிரகாசமுள்ள. இவன் சீரியாவிலிலுள்ள அந்தியோகியாவைச் சேர்ந்தவன். இவன் வைத்தியத் தொழில் புரிந்தவன். இவன் கிரேக்க குலத்தைச் சார்ந்தவன். இவனைப் பவுல் விருத்தசேதனம் பெற்றவர்களோடு சேர்த்து எழுதவில்லை – கொலோ 4:14 இவன் லூக்கா, அப்போஸ்தலருடைய நடபடிகள் என்ற இரண்டு நூல்களை எழுதியவன். இவன் துரோவாவில் பவுலோடு  சேர்ந்து ஊழியம் செய்தான். பின் மக்கோதோனியாவுக்கும் போனான். லூக்கா சுவிசேஷத்தை முதல் பிரபந்தம் என்று அப் 1:2ல் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். பவுலின் முதல் சிறைவாசத்தில் லூக்கா அவருடன் இருந்தான். “பிரியமான வைத்தியனான லூக்கா” என பவுல் இவனைக்   குறிப்பிட்டிருப்பதை கொலோ 4:4ல் காணலாம். பவுல் இரண்டாம் முறை சிறைபட்ட போதும் “லூக்கா மாத்திரம் என்னோடிருக்கிறான்” 2தீமோ  4:11 என்று பவுல் கூறியிருப்பதைக் காணலாம்.

லூக்கா இந்தசுவிசேஷத்தை தெயோப்பிலு என்ற உயர்குடிமகனுக்கு எழுதினான். இதில் இயேசுவை மனுஷகுமாரனாகவும், உலக இரட்சகராகவும் காட்டுகிறான். இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளை இந்நூலில் மட்டுமே உள்ளன – 2:41- 52  இந்நூலில் பெண்களைப் பற்றி அதிகமாகக் கூறப்பட்டுள்ளன. இதில்

  1. மரியாளின் பாடல் – 1:46-55
  2. சகரியாவின் பாடல் 1: 67—79
  3. தூதர்களின் பாடல் – 2:14
  4. சீமோனின் பாடல் 2:29—32

ஆகியவைகளைக் காணலாம். இதில் மட்டுமே கெட்ட குமாரனின் உவமை, லாசரு, ஐசுவரியவானின் உவமை, விதவை உவமை, பரிச்சேயன், ஆயக்காரன் பற்றிய உவமை ஆகியவற்றைக் காணலாம். லூக்கா கிரேக்க நாட்டில் ஒலிவமரத்தில் தூக்கிலிடப்பட்டு இரத்தசாட்சயாய் மரித்தான்.

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

4 weeks ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

9 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

9 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

9 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

9 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

9 months ago