கவலைப் படுவது பற்றி இயேசு: மத்தேயு 6:25-34 லூக்கா 12:22-31

எதற்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று இயேசு உபதேசிக்கிறார். மிருகஜீவன்களை தன் வாயின் வார்த்தையால் படைத்த தேவன் மனிதனுக்கு ஜீவனைக் கொடுக்க வானத்திலிருந்து இறங்கி வந்து தன்னுடைய சொந்த சுவாசத்தைக் கொடுத்தார். இவ்வாறு ஜீவனைத் தந்த தேவன் ஜீவனின் பராமரிப்புக்கு தேவையானதையும் தருவார். உடலைத் தந்த தேவன் உடையைத் தருவார். ஆகாயத்துப் பட்சிகளைப் பற்றி இயேசு குறிப்பிடும்போது, அவைகள் உழைக்கவில்லை என்ற பொருளில் கூறவில்லை. ஒரு பறவை உணவுக்காக உழைப்பது போன்று ஒரு மனிதன் உற்சாகத்துடன் உழைப்பதில்லை என்றும், அவைகள் நாளைய உணவுக்காகக் கவலைப்படுவதில்லை என்றும், அதாவது காணப்படாத எதிர்காலத்தைப் பற்றி அவைகள் மனிதனைப்போல துயரப்படுவதில்லை என்ற பொருளில் எடுத்துரைக்கிறார். அவைகள் தன் உணவுக்காக தானியங்களை விதைக்கிறதுமில்லை, அறுவடை செய்கிறதுமில்லை, பஞ்சகாலத்திற்கென்று சேர்த்து வைக்கிறதுமில்லை. ஆனாலும் எந்த பறவையும் ஆகாரமின்றி மரிப்பதில்லை. அதற்கு தேவையான உணவைத் தேவன் பல வழிகளில் ஆயத்தம் பண்ணி ஏற்ற நேரத்தில் கிடைக்கும்படி செய்கிறார்.

கவலைப்படுவதினால் எவனும் தன் உயரத்துடன் ஒரு முழத்தைக் கூட்ட முடியாது. அதாவது கவலைப்படுவது வீண் என இயேசு கூறுகிறார். சிலமணி நேரமே வாழும் பூக்களுக்கு அழகைப் பொழிந்த ஆண்டவர் தனது படைப்பின் மக்களை மறப்பாரோ? இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் போடப்படும் காட்டுப்  புல்லுக்கு உடுத்துவித்த தேவன் நித்தியத்துக்கு நியமிக்கப்பட்ட மனிதனுக்கு உடுத்துவியாமல் விட்டு விடுவாரோ? (1பே 2:9,10)

கவலைப்படுவது தேவனை அவிசுவாசிப்பது ஆகும். புறவினத்தார் கவலைப்பட வேண்டும். ஏனெனில் அவர்களது தேவர்கள் சபலம் நிறைந்தவர்களும், பொறாமை பிடித்தவர்களும், நிலையான பண்பு இல்லாதவர்களுமாவார். நம்முடைய பரமபிதா நமது சரீரத் தேவைகளையும், ஆன்மீகத் தேவைகளையும் அறிந்த்திருக்கிறார். (ரோ 8:32)

கவலையை வெல்ல தேவன் கூறும் காரியம் “தேவனுடைய ராஜ்ஜியத்தையும் நீதியையும் தேடுங்கள் மற்றவைகள் உங்களுக்கு அருளப்படும்” என்கிறார். அதாவது நாம் தேவனுடைய ராஜ்ஜியத்துக்குள் பிரவேசிக்கும் பொழுது, அவரது அன்பை நாம் பெறும் பொழுது, கதிரவனைக் கண்ட பனியைப்போல நமது கவலைகளும், கலக்கங்களும் மறைந்து விடும் என்கிறார். பரலோகராஜ்ஜியம் ஒருவனுக்குள் எப்பொழுது பிரவேசிக்கிறது என்றால் அவனுடைய அன்றாட வாழ்க்கையில், நடத்தையில், செய்யும் வேலையில் அல்லது தொழிலில், அவனுடைய பேச்சில், பார்வையில் தேவனுடைய ஆளுகை வரவேண்டும். தேவனுடைய அனுமதியின்றி ஒரு காரியமும் நடப்பதில்லை.

உபா 4:29 ல் மோசே “உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய்.” என்றார். தாவீது சங்  105:4 ல் “கர்த்தருடைய சமூகத்தை நித்தமும் தேடுங்கள்” என்றார். ஏசாயா 55:6 ல் “கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்” என்றார். நாம் அவரைத் தேடும்போது அவர் நம்மைக் குறித்த எல்லாக் காரியங்களையும் பார்த்துக் கொள்வார்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago