இயேசு பரிசுத்தஆவியினால் மரியாளின் வயிற்றில் உற்பத்தியாகி, அவளுடைய வயிற்றிலிருந்தார் (மத்தேயு 1 :18 20). மரியாளினால் பெற்றெடுக்கப்பட்டார் (லூக்கா 2: 7). விருத்தசேதனம் பண்ணப்பட்டு பெயரிடப்பட்டார் (லூக்கா 2: 21). தனது பெற்றோருடன் பயணம் செய்தார் (லூக்கா 2: 39, 41 – 42, 51). தனது வளர்ப்புத் தந்தையான யோசேப்புக்கும், தாயாகிய மரியாளுக்கும் கீழ்ப்படித்திருந்தார் (லூக்கா 2: 51). வளர்ந்தார் (லூக்கா 2: 40, 52). ஞானஸ்தானம் பெற்றார் (லூக்கா 3: 21). மற்ற மனிதரைப் போன்ற சரீரம் (மத்தேயு 26: 12), ஆத்துமா (மத்தேயு 26 :38), ஆவி (லூக்கா 23 :46) இருந்தன. அவருக்குப் பசி இருந்தது (மத்தேயு 4 :2). தாகம் இருந்தது (யோவான் 19: 28.) அவர் விசனமடைந்தார், கோபமடைந்தார் ( மாற்கு 3 ; 5). இளைப்படைந்தார் (யோவான் 4 ;6). தூங்கினார் (மாற்கு 4 :38). களிகூர்ந்தார் (லூக்கா 10 : 21). வேர்வை சிந்தினார் லூக்கா 22 :44). கண்ணீர் விட்டார் லூக்கா 19: 41). அவருக்கு இயேசு (மத்தேயு 1: 21), மனுஷகுமாரன் (லூக்கா 19 :10), தாவீதின் குமாரன் (மத்தேயு 1 :11,) நசரேயனாகிய இயேசு (அப்போஸ்தலர் 2 :22 ) போன்ற பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தன. எனவே இயேசு மனிதனாக இவ்வுலகில் வாழ்ந்தார்.

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago