வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் பெற்றிருக்கும் கிறிஸ்து (மத்தேயு 28 : 18), சபையை உலகினின்று எடுத்துக் கொள்வதற்காக ஆகாயத்திற்கு வருவார் (1 தெசலோனிக்கேயர் 4 : 14 ,1). இதை இரகசிய வருகை என்கிறோம். இதற்கு ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் கிறிஸ்து தமது பரிசுத்தவான்களோடும், தூதரோடும் பூமிக்கு வருவார் (சகரியா 14 : 1 – 9, மத்தேயு 24 : 30, 31, வெளிப்படுத்தல் 19 : 11- 21). தமது பரிசுத்தவான்க ளோடு சேர்ந்து ஆயிரம் ஆண்டுகள் பூமியில் அரசாளுவார் (வெளிப்ப டுத்தல் 20 : 4, 6). அதன் பின்னர் புதிய பூமியில் பிதாவுடன் இணைந்து சிங்காசனத்தில் வீற்றிருந்து என்றென்றுமாக அரசாளுவார் (வெளிப்படுத்தல் 22: 11). அவருடைய பரிசுத்தவான்களும் அவரோடு அரசாளுவார்கள் (தானியேல் 7 :18 ,27). மேலும் நியாயாதிபதியாக யாவரையும் கிறிஸ்து நியாயம் தீர்ப்பார் (யோவான் 5 : 27, 30, அப்போஸ்தலர் 10 : 42, ரோமர் 14 :10 2 கொரிந்தியர் 5 : 10, 2 தீமோத்தேயு 4;1). கிறிஸ்துவினுடையவர்களும் அவருடன் சேர்ந்து நியாயம் தீர்ப்பார்கள் (1கொரிந்தியர் 6 :3 ,வெளிப்படுத்தல் 20 : 4).

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago