புதிய ஏற்பாடு வேத பாடம்

பெத்சாயிதாவிலிலுள்ள குருடன் பெற்ற சுகம் – மாற்கு 8 : 22 – 26

இயேசு பெத்சாயிதா ஊருக்கு வந்த போது ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டு வந்து அவனைத் தொடும்படி வேண்டினர். பெத்சாயிதா மக்களுக்கு எத்தனையோ வாய்ப்பு களைக் கர்த்தர் தந்திருந்தும் அவர்கள் ஏற்றுக் கொள்ளாததால் அதற்கு ஐயோ என்று இயேசு கூறினார். மத்தேயு 11 : 21 எனவே இயேசு அந்த ஊருக்குள் அற்புதம் செய்யாமல் கண்  தெரியாத வனை ஊருக்கு வெளியே கொண்டு வந்து அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் தன்  கைகளை வைத்து எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார். அவன் நடக்கிற மனுஷர்களை மரங்களைப் போல் காண்கிறேன் என்றார்.

பின்பு இயேசு மறுபடியும் அவன் கண்களில் மேல்தன் கைகளை வைத்து அவனை ஏறிட்டுப் பார்க்கச் சொன்னார். அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து யாவரையும் தெளிவாகக் கண்டான். இயேசு கண்பார்வை பெற்றவனை நோக்கி இதை ஒருவருக்கும் கூற வேண்டாம் என்று கூறி  வீட்டிற்கு அனுப்பினார். பெத்சாயிதா ஊருக்கு ஐயோ என்று கூறினாலும் அதிலிருந்து தன்னிடம் வரும் தனி நபர்களை கர்த்தர் சந்தித்தார். பார்வை பெற்றவர் வெளியூரைச் சேர்ந்தவர். இந்த அற்புதத்தில் இயேசு தமது கையினால் தொட்டு    சுகமாக்கியதைப் பார்க்கிறோம்.

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

4 weeks ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

9 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

9 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

9 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

9 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

9 months ago