இன்றைக்கும் இயேசு யாவரையும் அழைக்கிறார். இயேசு கிறிஸ்துவிடம் இளைப் பாறுதலைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அவரிடம் செல்ல வேண்டும். அவரது கட்டளைக்குக் கீழ்படிய வேண்டும். அவரது நுகத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டு வாழ்வது மிகவும் கடினமானது என்று பலர் கருதுகின்றனர்.
இது தவறு. அவரைப் பின்பற்றுவது அவருடைய கிருபையால் மிகவும் எளிதானதும், மிகவும் மகிழ்ச்சியானதும் ஆகும்.
துன்பங்களினாலும், தான் செய்த பாவங்களினாலும் கவலைப்படுகிறவர்கள் இயேசுவிடம் வந்தால், அவரது கட்டளைக்குக் கீழ்படிந்தால், அவருடைய ஊழியக்காரராக மாறினால், இயேசு உங்களுக்கு அளவுகடந்த பாரங்களையும், கவலைகளையும் விலக்கி ஓய்வையும், சமாதானத்தையும் தர, தனது பரிசுத்த ஆவியானவரை அனுப்புவார். எத்தனை பெரிய சோதனைகளும், துன்பங்களும், கவலைகளும், வந்தாலும் தேவனுடைய கிருபை, உதவி அவர்களைத் தாங்கும்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…