சிறுபிள்ளைகளை இயேசு தொடும்படி அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். சீஷர்கள்
அவர்களை அதட்டினர். இயேசு அதைப்பார்த்து விசனமடைந்து “சிறுபிள்ளைகள்
என்னிடத்திற்கு வருவதற்கு இடங் கொடுங்கள் அவர்களைத் தடை பண்ணாதிருங்கள். தேவனுடைய ராஜ்ஜியம் அப்படிப்பட்டவர்களுடையது” என்றார். மேலும் இயேசு சிறுபிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்ஜியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
சிறுபிள்ளைகளிடம் தாழ்மை, உண்மையை ஏற்றுக்கொள்ளும் பண்பு, முற்றிலும் கீழ்படிதல், ஆகிய பண்புகளைக் காணலாம். அதேபோல் தாழ்மையாக, எளிமையாக, முழுநம்பிக்கையுடன், முழுமனதுடன் இயேசுவை ஆண்டவரும் இரட்சகருமாக ஏற்றுக்
கொண்டு அதன் மூலம் பாவத்திலிருந்து விலகி, தேவனை பரலோக பிதா என்று ஏற்றுக்
கொள்ள வேண்டும் என்பதாகும். இயேசு தன்னிடம் வந்த சிறுபிள்ளைகளை அணைத்துக் கொண்டு தன் கைகளை வைத்து ஆசீர்வதித்தார்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…