வேதாகம வினா விடை

ஆதியாகமம் Quiz கேள்வி பதில்

ஆதியாகமம் அதிகாரம் 1 – 10 Quiz கேள்வி பதில்

  1. தேவன் எப்போது வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்?
  2. ஆதியிலே இருள் எங்கிருந்தது?
  3. முதலாம் நாளில் படைக்கப்பட்டது எது?
  4. ஆகாய விரிவுக்கு என்ன பெயர் வைக்கப்பட்டது?
  5. எதற்காக ஆகாயவிரிவில் சுடர்கள்  படைக்கப்பட்டன?
  6. பூமியின் படைப்புகளை தேவன் என்ன செய்தார்?
  7. மனுஷனுக்கு தேவன் கொடுத்த முதல் கட்டளை எது?
  8. தேவன் தம்முடைய  கிரியைகளை  எந்த நாளில் நிறைவேற்றினார்?
  9. பூமியின் மீது சகலவித பூண்டுகளும் இன்னும் உண்டாக்கப்படாததன் காரணம் என்ன?
  10. ஆவிலா தேசத்தின் விளைபொருள் என்ன?
  11. மனுஷனை தேவனாகிய கர்த்தர் எதற்காக ஏதேன் தோட்டத்தில் கொண்டு வைத்தார்?
  12. எது மனுஷனுக்கு நல்லது அல்ல?
  13. தேவன் படைத்த படைப்புகளுக்கு பெயர் சூட்டியவர் யார்?
  14. தந்திரமுள்ளதாயிருந்த காட்டு ஜீவன் எது?
  15. நீ எங்கே இருக்கிறாய் என தேவன் யாரிடம் கேட்டார்?
  16. பூமி யார் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்?
  17. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தேவன் என்ன உடை உண்டாக்கி உடுத்தினார்?
  18. காயீன் ஆபேலை எந்த இடத்தில்  கொலை செய்தான்?
  19. காயீன் எங்கு குடியிருந்தான்?
  20. ஏனோக்கின் மகன் பெயர் என்ன?
  21. தனக்கு காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றவன்  யார்?
  22. யாருடைய காலத்தில் மக்கள்  கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ள ஆரம்பித்தனர்?
  23. எந்த நாளிலே மனுஷன் என்ற பெயர்  சூட்டப்பட்டது?
  24. ஆதாம் உயிரோடிருந்த வருஷங்கள் எத்தனை?
  25. முன்னூறு வருஷம் தேவனோடு சஞ்சரித்த மனிதன் யார்?
  26. நோவாவின்  பெயரின் பொருள் என்ன?
  27. நோவா எந்த வயதில் தன் மூன்று பிள்ளைகளையும் பெற்றான்?
  28. எது மனுஷனோடே என்றென்றைக்கும் போராடுவது இல்லை?
  29. நீதிமானும்  உத்தமனும் தேவனோடு சஞ்சரித்தவனுமாகிய ஒருவர் யார்?
  30. பேழைக்குள்  சென்ற நபர்கள் எத்தனை ?
  31. இந்த சந்ததியில்  யாரை தேவன் நீதிமானாகக் கண்டார்?
  32. ஜலப்பிரளயம் பூமியின் மீது உண்டானபோது நோவாவின் வயது எத்தனை?
  33. நோவாவின் பேழையின் கதவை அடைத்தவர் யார்?
  34. மூடப்பட்ட மலைகளுக்கு மேலாக ஜலம் எத்தனை  முழம் உயர்ந்தது?
  35. பேழை தங்கிய மலையின் பெயர் என்ன?​
  36. எந்த நாளிலே பேழை அரராத் மலையில் தங்கியது?
  37. நோவாவின் பேழைக்கு போக்கும்வரத்துமாயிருந்த பறவை எது?
  38. நோவாவிடம் திரும்பி வந்த பறவை எது ?
  39. பேழையிலிருந்து இறங்கி வந்த நோவா என்ன செய்தார்?
  40. தேவனாகிய கர்த்தர் நோவாவோடு செய்த உடன்படிக்கை எது?
  41. மாம்சத்தை எதோடு புசிக்கலாகாது?
  42. மனுஷனுடைய இரத்தத்தைச் சிந்துகிறவனுக்கு கிடைக்கும் தண்டனை எது?
  43. உடன்படிக்கையின் அடையாளமாக தேவன் எதை மேகத்தில்  வைத்தார்?
  44. வானவில் எப்போது  தோன்றும்?
  45. நோவாவின் மகன் காம் எத்தேசத்துக்கு தகப்பன்?
  46. திராட்சை ரசத்தைக் குடித்து வெறிகொண்டு கூடாரத்தில் படுத்திருந்தவன் யார்?
  47. ஜலப்பிரளயத்துக்குப் பின்பு நோவா எவ்வளவு காலம் வாழ்ந்தார்?
  48. நோவா வாழ்ந்த நாட்கள் எத்தனை?
  49. நோவாவின் குமாரருக்கு எப்போது பிள்ளைகள் பிறந்தனர்?
  50. பாபேல் எந்த தேசத்தில் உள்ளது?
  51. நினிவேயைக் கட்டினவன் யார்?
  52. நினிவேக்கும் காலாகுக்கும் நடுவில் இருக்கும் பட்டணம் எது?Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updatesதினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

    ஆதியாகமம் அதிகாரம் 11 – 20 Quiz கேள்வி பதில்

  1. பாஷையை தாறுமாறாக்க யார் இறங்கி வந்தார்?
  2. ஊர் என்பது யாருடைய பட்டணம்?​
  3. பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் யாருக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்று கர்த்தர் சொன்னார்?
  4. கர்த்தர் சொன்னபடியே அவருக்கு பின் சென்றவர் யார்?
  5. ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்ட போது அவருக்கு வயது என்ன?
  6. ஆபிராமுடன் சென்றவன் யார்?
  7. ஆபிராம் சுற்றி திரிந்து எந்த சமபூமி மட்டும் வந்தார்?
  8. மோரே என்னும் சமபூமியில் வசித்து வந்தவர்கள் யார்?
  9. தேசத்தில் பஞ்சம் உண்டானபடியால் ஆபிராம் எங்கு தங்கும்படிச் சென்றார்?
  10. சாராய் யாருக்கு முன்பாக  புகழப்பட்டாள்.
  11. லோத்தும் ஆபிராமும் ஒருமித்து வாழ ஏதுவில்லாமல் போகக் காரணம் என்ன?
  12. லோத்து எந்த தேசத்தைத் தெரிந்தெடுத்தார்?
  13. ஆபிராம் எங்கு குடியிருந்தார்?
  14. எந்த நாட்டு மக்கள்  பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாயிருந்தனர்?
  15. ஆபிராமின் சந்ததியை எப்படி பெருகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார்?
  16. நிலக்கீல் உண்டாகும் கேணிகள்  எந்த பள்ளத்தாக்கில் இருந்தன?
  17. ஆபிராமின் சகோதரனை மீட்க ஆபிராம் எத்தனை  நபர்களுடன் யுத்தத்திற்குச் சென்றார்?
  18. லோத்தின் பொருட்களை  மீட்டுக்கொண்டு வந்து கொண்டிருக்கையில் ஆபிராமை ஆசீர்வதித்தவன் யார்?
  19. மெல்கிசதேக்குக்கு  ஆபிராம் எதை கொடுத்து வந்தார்?
  20. ஆபிராமின் வீட்டுவிசாரணைக்காரன் பெயர் என்ன?
  21. கர்த்தர் எதை ஆபிராமின் வாழ்வில் நீதியாக எண்ணினார்?
  22. ஆபிராமுக்கு தேசத்தை சுதந்திரமாக் கொடுக்கும்படி அவனை எந்த பட்டணத்திலிருந்து அழைத்து வந்தார்?
  23. ஆபிராமின் சந்ததியார் எத்தனை ஆண்டுகள் அன்னிய  தேசத்தாரை சேவித்து  உபத்திரவப்படுவார்கள்?
  24. யாருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை?
  25. ஆபிராம் எத்தனை ஆண்டுகள்  கானான் தேசத்தில்  குடியிருந்தபின்பு சாராய்  ஆபிராமுக்கு  ஆகாரை கொடுத்தாள்?​
  26. ஆகார்  சாராயை விட்டு ஓடிப்போக காரணம் என்ன?
  27. வீட்டை விட்டு ஓடிப்போன ஆகாரை தேவதூதன்  எங்கு கண்டுபிடித்தான்?
  28. யார் துஷ்ட மனிதனாய் இருப்பான்  என்று ஆகாரிடம் தூதன் சொன்னான்?
  29. காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருக்கும் தண்ணீர் துரவின் பெயர் என்ன?
  30. ஆகார் இஸ்மவேலைப் பெற்ற போது ஆபிராமுக்கு வயது எத்தனை?
  31. ஆபிராகாமின் ஆண் சந்ததி எல்லாம் என்ன செய்யப்பட வேண்டும்?
  32. எந்த நாளில் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும் ?
  33. விருத்தசேதனம் பண்ணப்படாத ஆண்பிள்ளை எதை மீறினவன்?
  34. சாராய் என்ற பெயருக்கு தேவன் கொடுத்த புதுப்பெயர் என்ன?
  35. சாராள் என்பதன் பொருள் என்ன?
  36. தொன்னூற்று ஒன்பது வயதில் பெற்ற உடன்படிக்கை வார்த்தைகளை கேட்ட ஆபிரகாம்  என்ன செய்தார்?
  37. இஸ்மவேல் எத்தனை பிரபுக்களைப் பெறுவான் என தேவன் சொன்னார்?
  38. ஆபிரகாம் விருத்தசேதனம் பண்ணப்படுகையில் அவன் வயது என்ன?
  39. தேவன் ஆபிரகாமுக்கு எங்கு தரிசனமானார்?
  40. சோதோமின் பாவத்துக்காக கர்த்தர் என்ன செய்தார்?
  41. சோதோமுக்கு எத்தனை தூதர்கள் வந்தார்கள்?
  42. அப்பாலே போ பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுவது என்று கூறியவர் யார்?
  43. லோத்தை வீட்டுக்குள் இழுத்து பூட்டிய பின்னர் தெருவாசலிலிருந்த  சோதோமியருக்கு தூதர்கள் என்ன செய்தனர்?
  44. யாருடைய கூக்குரல் தேவ சமூகத்தில் பெரிதாயிருந்தது?
  45. லோத்து விரும்பி ஓடிப்போக சம்மதித்த ஊரின் பெயர் என்ன?
  46. பின்னிட்டுப் பார்த்த லோத்தின் மனைவிக்கு என்ன நேர்ந்தது?
  47. சோதோம்  கொமோராவிலிருந்து எழும்பிய புகை எவ்வாறு இருந்தது?
  48. சோவாரிலே குடியிருக்கப் பயந்த லோத்து  தன் குமாரத்திகளுடன் எங்கே குடியிருந்தார்?
  49. அபிமெலேக்கு எந்த ஊர் ராஜாவாயிருந்தான்?
  50. ஆண்டவரே நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ என கேட்டவர் யார்?
  51. அபிமெலேக் பிழைக்கும்படி யார் அவனுக்காக ஜெபம் செய்வான் என்று அபிமலேக்கிடம் கர்த்தர் சொன்னார்?
  52. தன் மனைவியினிமித்தம் தன்னை கொன்று போடுவார்கள் என்று  பயந்தவன் யார்?
  53. தன் தகப்பன் வீட்டை விட்டு தேசாந்தரியாய்த் திரிந்தவன் யார்?
  54. சாராளின் முகத்துக்கு முக்காட்டுக்காக அபிமலேக்கு ஆபிரகாமிடம் எத்தனை வெள்ளிக்காசு கொடுத்தான்?
  55. ​யார் நிமித்தமாக அபிமலேக்கின் வீட்டாரின் கர்ப்பங்கள் அடைக்கப்பட்டன?

ஆதியாகமம் அதிகாரம் 21 – 30 Quiz கேள்வி பதில்

  1. எப்போது ஆபிரகாமுக்கு சாராள் ஒரு குமாரனைப் பெற்றாள்?
  2. ஆபிரகாம் ஈசாக்குக்கு எட்டாம் நாளில் விருத்தசேதனம்  செய்ய காரணம் என்ன?
  3. ஈசாக்கு பிறந்தபொழுது ஆபிரகாமுக்கு வயது என்ன?
  4. தேவன்  என்னை நகைக்கப்பண்ணினார் என்று சொன்னது யார்?
  5. யாரிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று தேவன் சொன்னார்?
  6. பெயர்செபா வனாந்திரத்தில் அலைந்து திரிந்தவள் யார்?
  7. இஸ்மவேல் எந்த வனாந்திரத்தில் இருந்த போது விவாகம் பண்ணினான்?
  8. ஆபிரகாமிடம் தயவு கேட்டு வந்தவன் யார்?
  9. அபிமலேக்கும் ஆபிரகாமும் உடன்படிக்கை பண்ணுகையில் ஆபிரகாம் எதை அடையாளமாக கொடுத்தார்?
  10. அபிமலேக்கும் ஆபிரகாமும் ஆணையிட்டுக் கொண்ட இடத்தின் பெயர் என்ன?
  11. ஆபிரகாம் பெயர்செபாவிலே எதை உண்டாக்கி கர்த்தருடைய நாமத்தை த் தொழுது கொண்டார்?
  12. எதற்காக தேவன் ஆபிரகாமே என அழைத்தார்?
  13. ஆபிரகாம் எத்தனை நாள் பயணத்துக்குப் பின் ஈசாக்கை பலியிடும் மலையைக் கண்டார்?
  14. ஆபிரகாம் தேவனுக்குப் பயப்படுகிறவர் என்பதை எதினால் கர்த்தர் அறிந்தார்?
  15. ஆபிரகாம் கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்படிந்ததினால் ஜனங்களுக்கு என்ன நடக்கும்?
  16. ஈசாக்கை பலியிடச் சென்ற பின்பு ஆபிரகாம் எங்கே குடியிருந்தார்?
  17. சாராள் எத்தனை வருடம் உயிரோடிருந்தார்?
  18. சாராள் எங்கே மரித்தாள்?
  19. சாராளை அடக்கம் செய்ய தன் குகையை கொடுத்தவர் யார்?
  20. சாராளை அடக்கம்செய்ய வாங்கிய நிலத்திற்கு எத்தனை சேக்கல் வெள்ளியை ஆபிரகாம் நிறுத்து கொடுத்தார்?
  21. சாராளை அடக்கம் செய்த குகையின் பெயர் என்ன?
  22. ஆபிரகாம் ஈசாக்குக்கு எங்கே பெண் கொள்ள வேண்டாம் எனக் கூறினார்?
  23. ஆபிரகாமின் ஊழியக்காரன் ஈசாக்குக்குப் பெண் பார்க்க எந்த ஊரில் வந்து சேர்ந்தார்?
  24. கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே உள்ளே வாரும் நீர் வெளியே நிற்பானேன் என்று சொன்னவர் யார்?
  25. ஆபிரகாமின் ஊழியக்காரனுடன் செல்ல ஆயத்தப்பட்ட ரேபேக்காளை சகோதரனும் வீட்டு மக்களும் என்ன சொல்லி வாழ்த்தினர்?
  26. ஈசாக்கு எந்த துரவின் வழியாய்ப் புறப்பட்டு வந்தார்?
  27. ஈசாக்கு சாயங்கால வேளையில் எதற்காக வெளியே சென்றார்?
  28. ஆபிரகாமின் இரண்டாவது மனைவியின் பெயர் என்ன?
  29. ஆபிரகாம் எத்தனை ஆண்டுகள் உயிரோடிருந்தார்?
  30. மக்பேலா குகையில் யாரை எல்லாம் அடக்கம் பண்ணினர்?
  31. இஸ்மவேல் எத்தனை வருடம் வாழ்ந்தார்?
  32. ஈசாக்கு ரெபேக்காளை விவாகம் பண்ணினபோது அவனுக்கு வயது என்ன?
  33. ரெபேக்காள் மலடியாயிருந்தபோது  ஈசாக்கு என்ன செய்தார்?
  34. ஈசாக்குக்கு பிள்ளைகள் பிறந்தபோது அவனுக்கு வயது எத்தனை?
  35. யாக்கோபு எப்படிப்பட்டவனாயிருந்தார்?
  36. தன் சேஷ்டபுத்திர பாகத்தை  அலட்சியம் பண்ணியவர் யார்?
  37. அபிமலேக்கு எந்த நாட்டின்  ராஜா?
  38. ஈசாக்கிடத்தில் எகிப்துக்கு போக வேண்டாம்  என்று சொன்னது யார்?
  39. ஈசாக்கு வர வர ஐசுவரியவனாகி வருவதைக் கண்டு  பொறாமை கொண்டவர்கள்  யார்?
  40. ஈசாக்கின் மேய்ப்பர்களுக்கும் கேராரூர் மேய்ப்பராகளுக்கும் துரவினிமித்தம் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அந்த துரவுக்கு என்ன பெயர் வைத்தான்?
  41. ஈசாக்குவின் மூன்றாவது  துரவினால் வாக்குவாதம் வரவில்லை ஆகவே அந்த துரவுக்கு என்ன பெயர் வைத்தான் ?​
  42. ரெகொபோத் என்றால் பொருள் என்ன?
  43. ஈசாக்கின் வேலைக்காரர் கடைசியாக வெட்டிய துரவின் பெயர் என்ன?
  44. தன் சொல்லை மாத்திரம் கேட்கும்படி தன் மகனை வற்புறுத்திய தாய் யார்?
  45. தந்திரமாய் எழுந்து சகோதரன் ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்ட ஈசாக்கின் மகன் யார்?
  46. உன்னை காத்து இந்த தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன் நான் உனக்குச் சொன்னதைச்  செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்று யாரிடம் கர்த்தர் சொன்னார்?
  47. யாக்கோபு கல்தூணை நிறுத்தி எண்ணெய் வார்த்து அவ்விடத்துக்கு என்ன பெயரிட்டார்?
  48. பெத்தேலுக்கு முற்காலத்தில் இருந்த பெயர் என்ன?
  49. லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுக்கப்பட்டவள் யார்?
  50. யாக்கோபு யாரை அதிகமாய் நேசித்தான்?
  51. கடைசியாக பெற்ற மகனுக்கு லேயாள் இப்பொழுது கர்த்தரை துதிப்பேன் என்று கூறி அவனுக்கு என்ன பெயரிட்டான்?
  52. பிள்ளை இல்லாவிட்டால் நான் சாகிறேன் எனக் கூறியவள் யார்?
  53. கோதுமை அறுப்பு காலத்தில் வயல்வெளிகளில் போய் ரூபன் எதை கண்டு எடுத்து கொண்டு தாயிடம் கொடுத்தான்?
  54. லேயாள் பெற்ற மகளின் பெயர் என்ன?
  55. ராகேலுக்கு கொடுக்கப்பட்ட மகனின் பெயர் என்ன?Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updatesதினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

     

ஆதியாகமம் அதிகாரம் 31 – 40 Quiz கேள்வி பதில்

  1. லாபான் யாக்கோபின் சம்பளத்தை எத்தனை முறை மாற்றினான் ?
  2. லாபான் உனக்குச் செய்கிற யாவையும் நான் கண்டேன் என்று கூறியது யார்?
  3. யாக்கோபு தனக்கு உண்டானவற்றைச் சேர்த்துக்கொண்டு ஆற்றை கடந்து எந்த மலையை நோக்கிப் போனார்?
  4. தன் தகப்பனுடைய சொரூபங்களைத் திருடியவள் யார்?
  5. யாக்கோபு லாபான் வீட்டிலிருந்து வெளியேறிய செய்தி லாபானுக்கு எந்த நாளிலே அறிவிக்கப்பட்டது?
  6. ராத்திரியிலே தேவன் லாபானிடத்தில் என்ன சொன்னார்?
  7. யாக்கோபு எத்தனை ஆண்டுகள் லாபானிடத்தில்  இருந்தார்?
  8. எத்தனை ஆண்டுகள் லாபானின் குமாரத்திகளுக்காக யாக்கோபு வேலை செய்தான்?
  9. லாபானும் யாக்கோபும் கல்லை நிறுத்தி உடன்படிக்கை செய்த ஸ்தலம் எது என்று அழைக்கப்படுகிறது?
  10. இந்த கற்குவியல் எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னபடியால் அது என்ன பெயருடன் அழைக்கப்படுகிறது?
  11. லாபான்  யாக்கோபிடம்  நம்முடனே ஒருவரும் இல்லை பார் தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி  என்று சொன்னபடியால் அது என்ன பெயர் பெற்றது?
  12. லாபானும் யாக்கோபும் மீண்டும் யுத்தத்துக்கு வராமல் இருக்க சாட்சியாக நிறுத்தப்பட்டது எது?
  13. யாக்கோபு பிரயாணம் பண்ணுகையில் அவரை சந்தித்தவர்கள் யார்?
  14. தேவனுடைய சேனையை சந்தித்த இடத்துக்கு யாக்கோபு என்ன பெயரிட்டான்?
  15. ஏசா எத்தனை பேருடன் யாக்கோபை சந்திக்க ஆயத்தப்பட்டான்?
  16. ஏசாவை கண்டு பயந்த யாக்கோபு இராமுழுதும் என்ன செய்தான்?
  17. ஏசாவை மகிழ்ச்சியாக்க யாக்கோபு என்ன திட்டம் தீட்டினான்?
  18. தன் இரு மனைவிகளையும் பதினொரு பிள்ளைகளையும் பணிவிடைகாரர்களையும் யாக்கோபு கூட்டிக்கொண்டு எந்த ஆற்றை கடந்தான்?
  19. யாக்கோபுக்கு கொடுக்கப்பட்டப் புதுப் பெயர் என்ன?
  20. யாக்கோபு தேவனை முகமுகமாய் கண்ட இடத்திற்கு என்ன பெயர் வைத்தார்?
  21. பெனியேல் என்றால் பொருள் என்ன?
  22. இஸ்ரவேலர் இந்நாள் வரைக்கும் தொடைச்சந்து நரம்பை புசியாததற்கு காரணம் என்ன?
  23. எத்தனை விசை யாக்கோபு ஏசாவுக்கு முன்பாக தரை மட்டும் குனிந்து வணங்கி ஏசாவின் கிட்ட சேர்ந்தார்?
  24. யாக்கோபு எங்கே தனக்கு   ஒரு வீடு கட்டினார்?
  25. யாக்கோபு   கூடாரம் போட்ட நிலம் ஏமோரின் கையிலே எத்தனை வெள்ளிக்  காசுக்கு வாங்கப்பட்டது?
  26. ஏமோரின் கையில் விலைக்கு வாங்கிய நிலத்தில் யாக்கோபு கட்டிய பலிபீடத்தின் பெயர் என்ன?
  27. தேசத்துப் பெண்களைப் பார்க்க சென்ற யாக்கோபின் குமாரத்தி யார்?
  28. சீகேம் யாருடைய மகன்?
  29. ஏமோரியரைப் பட்டயக்கருக்கால் வெட்டிய தீனாளின் சகோதரர்கள் யார்?
  30. சீகேமிலிருந்து யாக்கோபும் அவர் ஜனங்களும் கானான் தேசத்திலுள்ள எந்த இடத்துக்கு வந்து  சேர்ந்தனர்?
  31. யாக்கோபு பெத்தேலில் கட்டிய பலிபீடத்திற்கு என்ன பெயர் வைத்தார்?
  32. ரெபேக்காளின் தாதியின் பெயர் என்ன?
  33. தெபொராளை அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு என்ன  பெயர் வந்தது?
  34. தேவன் தன்னோடு பேசின இடத்திற்கு யாக்கோபு என்ன பெயர் வைத்தார்?
  35. மரணகாலத்தில் யாருடைய ஆத்துமா பிரியும்போது அவள் தன் குமாரனுக்கு பெனொனி எனப் பெயரிட்டாள்?
  36. பெனொனி என்பதை தகப்பன் எவ்விதம் மாற்றினார் ?
  37. ராகேல் மரித்து எங்கே அடக்கம் பண்ணப்பட்டாள் ?
  38. ஈசாக்கு எந்த வயதில் மரித்தார்?
  39. ஏதோமியரின் தகப்பன் யார்?
  40. ஏசாவின் மனைவிகள் பெயர் என்ன?
  41. பஸ்மாத் யாருடைய குமாரத்தி ?
  42. அவர்கள் மந்தையினிமித்தம் தாங்கள் தங்கியிருந்த பூமி தாங்க கூடாததாய் இருந்ததால் ஒருவரை ஒருவர் பிரிந்து சென்றவர்கள் யார்?
  43. ஏசா எந்த மலையில் குடியேறினார்?
  44. ஏசாவுக்கு கொடுக்கப்பட்ட இன்னொரு பெயர் என்ன?
  45. யாக்கோபு எங்கே தங்கியிருந்தார்?
  46. யோசேப்பு எத்தனை வயதில் ஆடுகளை மேய்த்து வந்தார்?
  47. தன் சகோதரரின் துன்மார்க்கத்தைத் தகப்பனுக்கு எடுத்துக்கூறியவர் யார்?
  48. யாக்கோபு  யோசேப்பை அதிகமாக நேசிக்க காரணம் என்ன?
  49. யோசேப்பின் இரண்டாவது சொப்பனம் எது?
  50. யோசேப்பு சொன்ன சொப்பனத்தை மனதில் வைத்துக்  கொண்டது யார்?
  51. யோசேப்பின் சகோதரர்கள் எங்கே ஆடுகளை மேய்க்கப் போனார்கள்?
  52. யோசேப்பை தப்புவிக்க முயற்சி செய்தவன் யார்?
  53. நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று  அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன என சகோதரரிடம் சொன்னவர் யார்?
  54. யோசேப்பை எத்தனை வெள்ளிக்காசுக்கு விற்றுப் போட்டார்கள்?
  55. வஸ்திரங்களைக் கிழித்து  அரையில் இரட்டைக்கட்டிக் கொண்டு  தன் மகனுக்காக அனேக நாள்  துக்கம் கொண்டாடினவர் யார்?
  56. யூதா தன் சகோதரரை விட்டு  யாரிடம் சேர்ந்தான் ?
  57. யூதா யாரை விவாகம் பண்ணினான்?
  58. யூதா பெற்ற குமாரர்களின் பெயர் என்ன?
  59. யார் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால் கர்த்தர் அவனை அழித்துப் போட்டார் ?
  60. யார் செய்தது கர்த்தரின் பார்வைக்கு பொல்லாததாயிருந்ததினால் அவனையும் அவர் அழித்துப் போட்டார்?
  61. என்னிலும் அவள் நீதியுள்ளவள் என்று  யார் யாரைக் குறித்து சொன்னது ?
  62. மீறுதலினால் பிறந்தவனுக்கு என்ன பெயர் இட்டாள்?
  63. சிவப்பு நூல் கட்டப்பட்டவன் பிறந்த போது அவனுக்கு என்ன பெயரிடப்பட்டது?
  64. கர்த்தர்  யோசேப்போடே கூட இருந்தபடியால் அவன் எப்படிப்பட்டவனான்?
  65. தேவனுக்கு விரோதமாய்ப்  பாவம் செய்வது எப்படி என்று சொன்னவர் யார்?
  66. எகிப்தின் ராஜாவுக்கு குற்றம் செய்தவர்கள் யாவர்?
  67. எது தேவனுக்குரியதல்லவா என்று யோசேப்பு சொன்னார்?

ஆதியாகமம் அதிகாரம் 41 – 50 Quiz கேள்வி பதில்

  1. எகிப்து தேசத்தின் செழிப்பும்  பஞ்சமும் யாரால் நிச்சயப்பட்டிருக்கிறது?
  2. நல்ல விளைச்சல் உண்டாகும் காலத்தில் எத்தனை பகுதியை ராஜாவின் களஞ்சியத்தில் சேர்க்க யோசேப்பு ஆலோசனை சொன்னான்?
  3. பார்வோன் யோசேப்புக்கு இட்ட பெயர் என்ன?
  4. யோசேப்புக்கு பார்வோன் யாரை மனைவியாகக் கொடுத்தான்?
  5. ஆஸ்நாத் யாருடைய மகள்?
  6. போத்திபிரா எந்த பட்டணந்து ஆசாரியன்?
  7. யோசேப்பு  எகிப்தின் பார்வோனுக்கு முன்பாக நிற்கும் போது அவனுக்கு வயது எத்தனை?
  8. என் வருத்தம் யாவையும் என் குடும்பம் அனைத்தையும் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி யோசேப்பு  மூத்தவனுக்கு என்ன பெயர் சூட்டினான்?
  9. நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பெருகப் பண்ணினார் என்று சொல்லி யோசேப்பு இளையகுமாரனுக்கு என்ன பெயர் சூட்டினான்?
  10. சகல தேசத்திலும் பஞ்சம் ஏற்பட்டதும் எந்த தேசத்தில் ஆகாரம் இருந்தது?
  11. எகிப்து தேசத்தில் வர வர எது கொடிதாயிற்று?
  12. யோசேப்பின் சகோதரர் எத்தனை பேர் தானியங்கொள்ள எகிப்துக்கு  போனார்கள்?
  13. யோசேப்பு தன் சகோதரர்களை எத்தனை நாள் காவலில் வைத்தான்?
  14. யோசேப்பு தன் சகோதரர்களிடம் எதைக்கொண்டு பேசினான்?
  15. யோசேப்பு  யாரைப் பிடித்து கட்டுவித்தான்?
  16. எதைக்கண்டு யாக்கோபும்  யோசேப்பின் சகோதரர்களும் பயந்தார்கள்?
  17. பென்யமீனுக்காக உத்திரவாதம் பண்ண முன் வந்தவன் யார்?
  18. தன் சகோதரனை மகனே  என்றழைத்தது யார்?
  19. எகிப்தியர் யாரோடு சாப்பிட மாட்டார்கள்?
  20. பென்யமீனுடைய சாக்கிலே எது கண்டுபிடிக்கப்பட்டது?
  21. தேவன் எதை விளங்கப்பண்ணினார் என்று யோசேப்பின் சகோதரர்கள் சொன்னார்கள்?
  22. நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர் என்று யோசேப்பை பார்த்து சொன்னவர் யார்?
  23. என் தகப்பனுக்கு  நேரிடும் தீங்கை நான் எப்படி காண்பேன் என்றது யார்?
  24. யோசேப்பு தன்னுடைய சகோதரரிடத்தில் தேவன் தன்னை எதற்கு எகிப்துக்கு
    அனுப்பினார்?
  25. யோசேப்பு தன்னை யாருக்கு தகப்பனாக தேவன் வைத்தார் என்றான்?
    பார்வோனுக்கு ஆதி 45: 8
  26. எந்த சமாசாரம் பார்வோனின் அரன்மனையில் பிரசித்தமாயிற்று?
  27. யோசேப்பு பென்யமீனுக்கு எத்தனை வெள்ளிக்காசை கொடுத்தார்?
  28. யாருடைய ஆவி உயிர்த்தது?
  29. தேவன் யாக்கோபிடத்தில் எங்கு போகப் பயப்படவேண்டாம் என்றார்?
  30. நான் உன்னுடனே கூட எங்கு வருவேன் என்று தேவன் யாக்கோபுக்கு சொன்னார்?
  31. கானானிய ஸ்தீரியின் குமாரன் யார்?
  32. எவர்கள் கானான் தேசத்தில் இறந்தார்கள்?
  33. ஆசோருடைய மகள் யார்?
  34. பெரீயாவின் குமார் யார் யார்?
  35. தாணுடைய குமாரன் யார்?
  36. எகிப்துக்கு  போன யாக்கோபின் குடும்பத்தார் எத்தனை பேர்?
  37. யாக்கோபு தன்னை யோசேப்பு சந்திக்க வரும்படி சொல்ல யாரை அனுப்பினான்?
  38. எவர்கள் எகிப்தியற்கு அருவருப்பானவர்கள்?
  39. பார்வோனின் கட்டளைப்படி யோசேப்பு தன் தகப்பனையும் சகோதரர்களையும் எந்த பட்டணத்தில் குடியேற்றினான்?
  40. பஞ்சத்தினால் மெலிந்து போன தேசங்கள் எது?
  41. ஆசாரியரின் நிலம் விற்கப்படாததன் காரணம் என்ன?
  42. பார்வோனுக்குச் சேராமலிருந்த நிலம் எது?
  43. யாக்கோபு எகிப்து தேசத்தில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தான்?
  44. கட்டிலில் சாய்ந்து தொழுது கொண்டவன் யார்?
  45. கானான் தேசத்திலுள்ள எந்த இடத்தில் தேவன் யாக்கோபுக்குத் தரிசனமாகி ஆசீர்வதித்தார்?
  46. ராகேல் எங்கு அடக்கம் பண்ணப்பட்டாள்?
  47. இஸ்ரவேல் தன் வலது கையினால் யாரை ஆசீர்வதித்தார்?
  48. இஸ்ரவேல் தன் இடது கையினால்  யாரை ஆசீர்வதித்தார்?
  49. யாக்கோபின் குமாரரில் ஏக சகோதரர்கள் யார்?
  50. சகோதரரால் புகழப்படுபவன் யார்?
  51. யார் வருமளவும் செங்கோல் யூதாவை விட்டு நீங்குவதில்லை?
  52. கடல்துறை அருகே குடியிருப்பவன் யார்?
  53. இரண்டு பொதிகளின் நடுவே படுத்திருக்கும் பலத்த கழுதை யார்?
  54. இஸ்ரவேலின் ஒரு கோத்திரமாகி தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பவன் யார்?
  55. யார் மேல்  ராணுவக் கூட்டம் பாய்ந்து விழும்?
  56. ஆகாரம் கொழுமையானதும் ராஜாக்களுக்கு வேண்டிய  ருசி வர்க்கங்களை தருபவன் யார்?
  57. விடுதலை பெற்ற பெண்மான் யார்?
  58. கனிதரும் செடி யார்?
  59. மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவன் யார்?
  60. பீறுகிற ஓநாய் யார்?
  61. இஸ்ரவேலின் உடலுக்கு சுகந்த வர்க்கமிட்டவர்கள் யார்?
  62. சுகந்தவர்க்கம் இட எத்தனை நாட்கள் ஆகும்?
  63. இஸ்ரவேலுக்காக எகிப்தியர் எத்தனை நாட்கள் துக்கம் அனுசரித்தனர்?
  64. ஆத்தாத்தின் போர்களம் எங்குள்ளது?
  65. இஸ்ரவேலுக்காக மிகுந்த துக்கம் கொண்டாடினபடியால் அந்த இடத்துக்கு என்ன பெயர் வந்தது?
  66. யோசேப்பு எத்தனை  வருடம் உயிரோடு இருந்தான்?
  67. யோசேப்பு ஏப்பீராயீமுக்கு பிறந்த எத்தனை தலைமுறை பிள்ளைகளைக் கண்டான்?
  68. மரித்துப்போன யோசேப்பை சுகந்த வர்க்கமிட்டு எங்கு வைத்தார்கள்?Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updatesதினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

     

Sis. Rekha

View Comments

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago