வேதாகம வினா விடை

கலாத்தியர் கேள்வி பதில்

கலாத்தியர் அதிகாரம் 1 Quiz கேள்வி பதில்

  1. பவுலும் அவனோடிருந்த மற்ற சகோதரர்களும் எந்த சபைக்கு காலத்தியர் நிருபத்தை எழுதினார்கள?
    கலாத்தியா (1:2)
  2. இப்பொழுது இருக்கிற பிரபஞ்சம் எப்படிப்பட்டது என்று பவுல்?சொல்லுகிறார் பொல்லாத பிரபஞ்சம் (1:4)
  3. கலாத்தியர் எதற்கு திரும்பினார்கள்?
    வேறொரு சுவிஷேசத்திற்கு (1:6)
  4. கலாத்தியரைத் கலகப்படுத்தினவர்கள் எதை புரட்ட மனதாயிருந்தார்கள்?கிறிஸ்துவினுடைய சுவிசேஷம் (1:7)
  5. வானத்திலிருந்து வருகிற ஒரு தூதன் வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால், அவன் எப்படிப்பட்டவன்?
    சபிக்கப்பட்டன் (1:8)
  6. பவுல் எதை அல்லது யாரை மிகவும் துன்பப்படுத்தினார்?
    தேவனுடைய சபையை (1:13)
  7. தன் ஜனத்தாரில் தன் வயதுள்ள அநேகரைப்பார்க்கிலும் யூதமார்க்கத்திலே தேறினவனாய் இருந்தவர் யார்?
    பவுல் (1:14)
  8. பவுல் எதற்க்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தார்?
    தன் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக (1:14)
  9. பவுல் தேவனுடைய  குமாரனை யாரிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்க தேவன் பிரியமாயிருந்தார்?
    புறஜாதிகளிடத்தில் (1:16)
  10. தேவன் தம்முடைய குமாரனை தமக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது பவுல் எவைகளோடு யோசனைபண்ணவில்லை?
    மாம்சத்தோடும் இரத்தத்தோடும் (1:16)
  11. தேவன் தம்முடைய குமாரனை பவுலுக்கு வெளிப்படுத்தினபோது பவுல் எங்கே புறப்பட்டுப் போனார்?
    அரபிதேசத்திற்கு (1:17)
  12. அரபிதேசத்திலிருந்து பவுல் எங்கே திரும்பி வந்தார்?
    தமஸ்கு ஊருக்கு (1:17)
  13. மூன்று வருஷம் சென்ற பின்பு பவுல் யாரை கண்டுகொள்ளும்படி போனார்?
    பேதுருவை (1:18)
  14. பவுல் பேதுருவினிடத்தில் எத்தனை நாள் தங்கியிருந்தார்?
    பதினைந்து நாள் (1:18)
  15. பவுல் எருசலேமிலிருந்து எந்த நாடுகளின் புறங்களில் வைத்தார்?
    சீரியா சிலிசியா (1:18-21)

    Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

    தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்


கலாத்தியர் அதிகாரம் 2 Quiz கேள்வி பதில்

  1. எத்தனை வருஷம் சென்றபின்பு பவுல் மறுபடியும் எருசலேமுக்குப் போனார்?
    பதினாலு வருஷம் (2:1)
  2. பவுலுடனேகூட இருந்த தீத்து எந்த தேசத்தை சேர்ந்தவன்?
    கிரேக்க (2:3)
  3. விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளும்படிக்குக் கட்டாயம்பண்ணப்படாதவன் யார்?
    தீத்து (2:3)
  4. கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டானது என்ன?
    சுயாதீனம் (2:4)
  5. கள்ளச் சகோதரர் எதற்கு நம்மை அடிமைகளாக்கும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்தார்கள்?
    நியாயப்பிரமாரணத்திற்கு (2:4)
  6. கலாத்தியரிடம் எது நிலைத்திருக்கும்படி பவுலும் பர்னபாவும் தீத்துவும் கள்ளச் சகோதரருக்கு இணங்கவில்லை?
    சுவிசேஷத்தின் சத்தியம் (2:5)
  7. பேதுரு யாருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி கையளிக்கப்பட்டது?விருத்தசேதனமுள்ளவர்களுக்கு (2:8)
  8. பவுலுக்கு யாருக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி கையளிக்கப்பட்டது?விருத்தசேதனம் இல்லாதவர்களுக்கு (2:8)
  9. தூண்களாக எண்ணப்பட்டவர்கள் யார்?
    யாக்கோபும், கேபாவும், யோவானும் (2:9)
  10. யாரை நினைத்துக்கொள்ளும்படி பவுலிடமும, பர்னபாவிடமும் யாக்கோபும், கேபாவும், யோவானும் கூறினார்கள்?
    தரித்திரரை (2:10)
  11. பேதுருவை முமுகமாய்ப் எதிர்த்தவர் யார்?
    பவுல் (2:11)
  12. யாரிடத்திலிருந்து சிலர் வருகிறதற்குமுன்னே பவுல் புறஜாதியாருடனே சாப்பிட்டான்?
    யாக்கோபு (2:12)
  13. பேதுருவோடே கூட மாயம்பண்ணியவர்கள் யார்?
    மற்ற யூதர்கள் (2:13)
  14. பேதுருவும் மற்ற யூதரும் எதற்கு ஏற்றபடி சரியாய் நடக்கவில்லை என்று பவுல் கண்டார்?
    சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி (2:14)
  15. “புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக்கட்டாயம் பண்ணலாம்” – யார், யாரிடம் கேட்டது?
    பவுல் பேதுருவிடம் (2:14)
  16. எதின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லை?
    நியாயப்பிரமாணத்தின் (2:15)
  17. எதினால் மனுஷன் நீதிமான்களாக்கப்படுகிறான்?
    கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே (2:15)
  18. பவுல் எதற்க்கென்று நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே என்று கூறினார்?
    தேவனுக்கென்று பிழைக்கும்படி (2:19)
  19. பவுல் எதை விருதாவாக்குகிறதில்லை என்று சொன்னார்?
    தேவனுடைய கிருபையை (2:21)

கலாத்தியர் அதிகாரம் 3 Quiz கேள்வி பதில்

  1. கலாத்தியர் எதற்கு கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக மயக்கப்பட்டதாக பவுல் கூறினார்?
    சத்தியத்திற்கு (3:1)
  2. இயேசு கிறிஸ்து எப்படிப்பட்டவராக கலாத்தியருக்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தார்?
    சிலுவையிலறையப்பட்டவராக (3:1)
  3. தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது – இதில் அவன் யாரை குறிக்கிறது?
    ஆபிரகாம் (3:6)
  4. ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறியப்படுகிறவர்கள் யார்?
    விசுவாசமார்க்கத்தார்கள் (3:7)
  5. யாருக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று வேதம் முன்னறிவித்தது?
    ஆபிரகாமுக்குள் (3:8)
  6. சாபத்திற்குட்பட்டிருக்கிறவர்கள் யார்?
    நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரர்கள் (3:10)
  7. எதில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறது?
    நியாயப்பிரமாண புஸ்தகத்தில் (3:10)
  8. எதினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லை?
    நியாயப்பிரமாணத்தினால் (3:11)
  9. எதினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறது?
    விசுவாசத்தினாலே (3:11)
  10. மரத்திலே தூக்கப்பட்ட எவனும் ————————————– என்று எழுதியிருக்கிறது?
    சபிக்கப்பட்டவன் (3:13)
  11. கிறிஸ்து நமக்காகச் சாபமாகி எதற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார்?
    நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு (3:13)
  12. கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வருவது?
    ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் (3:14)
  13. மனுஷர்களுக்குள்ளே உறுதிபண்ணப்பட்ட எதை ஒருவனும் தள்ளுகிறதுமில்லை?
    உடன்படிக்கையை (3:15)
  14. உடன்படிக்கைக்கு பின்பு எத்தனை வருடங்கள் கழித்து நியாயப்பிரமாணம் உண்டானது?
    நானூற்றுமுப்பது (3:17)
  15. நியாயப்பிரமாணமானது எதை வியர்த்தமாக்கமாட்டாது?
    வாக்குத்தத்தத்தை (3:17)
  16. நியாயப்பிரமாணமானது யாரைக்கொண்டு கட்டளையிடப்பட்டது?
    தேவதூதரைக்கொண்டு (3:19)
  17. நம்மை கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது எது?
    நியாயப்பிரமாணம் (3:24)
  18. எதற்க்காக நியாயப்பிரமாணம் நம்மை கிறிஸ்துவிடம் வழி நடத்தியது?
    விசுவாசத்திலே நீதிமான்களாக்கப்படுவதற்கு (3:24)
  19. எது வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்ல?
    விசுவாசம் (3:25)
  20. நாம் யாருடைய புத்திரராயிருக்கிறோம்?
    தேவனுடைய (3:26)
  21. கிறிஸ்துவுக்குள் யூதனென்றும் ————- என்றும் இல்லை?
    கிரேக்கன் (3:28)
  22. கிறிஸ்துவுக்குள் அடிமையென்றும் ————- என்றும் இல்லை?
    சுயாதீனன் (3:28)
  23. கிறிஸ்துவுக்குள் ஆணென்றும் ————- என்றும் இல்லை?
    பெண் (3:28)
  24. வாக்குத்தத்தத்தின்படி சுதந்தரராயிருப்பவர்கள் யார்?
    கிறிஸ்துவினுடையவர்கள் (3:29)

    Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

    தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்


கலாத்தியர் அதிகாரம் 4 Quiz கேள்வி பதில்

  1. எல்லாவற்றிற்கும் எஜமானாயிருப்பவன் யார்?
    சுதந்தரவாளியானவன் (4:1)
  2. தேவனுடையகுமாரன் நாம் எதை அடையும்படிஅனுப்பப்பட்டார்?
    புத்திராசுவிகாரத்தை (4:4, 5)
  3. நாம் தேவனுடைய புத்திரராயிருக்கிறபடியால் அவரை எப்படி அழைக்கும்படியான உரிமை கொடுத்திருக்கிறார்?
    அப்பா, பிதாவே (4:6)
  4. இவ்வுலகத்தின் வழிபாடுகள் எப்படிப்பட்டது என பவுல் கூறினார்?
    பெலனற்றதும் வெறுமையானதுமானதும் (4:9)
  5. கலாத்தியருக்கு பவுல் எதினாலே சத்துருவானேன் என்று கூறினார்?
    சத்தியத்தைத் சொன்னதினாலே (4:16)
  6. எப்பொழுதும் எதில் வைராக்கியம் பாராட்ட வேண்டும்?
    நல்விஷயத்தில் (4:18)
  7. அடிமையானவள் சுயாதீனமுள்ளவள் என்பது எதை குறிக்கிறது?
    இரண்டு ஏற்பாடுகள் (4:24)
  8. இரண்டு ஏற்பாடுகளில் ஒன்று எந்த மலையில் உண்டானது?
    சீனாய்மலை (4:24)
  9. நாம் யாரைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம்?
    ஈசாக்கு (4:28)
  10. நாம் அடிமையானவளுக்குப் ——————, ————- பிள்ளைகளாயிருக்கிறோம்
    பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே (4:31)

கலாத்தியர் அதிகாரம் 5 Quiz கேள்வி பதில்

  1. நாம் மறுபடியும் எதின் நுகத்துக்கு உட்படக்கூடாது?
    அடிமைத்தனம் (5:1)
  2. நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாயிருக்கிறவன் யார்?
    விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளுகிற எந்த மனுஷன் (5:3)
  3. நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிறவர்கள் யாரை விட்டு பிரிந்தார்கள்?
    கிறிஸ்து (5:4)
  4. எதினால் பவுல் நம்பிக்கையோடே காத்திருந்தார்?
    விசுவாசத்தினால் (5:15)
  5. ————- கிரியைசெய்கிற விசுவாசமே உதவும்.
    அன்பினால் (5:16)
  6. புளிப்புள்ள கொஞ்சமாவானது எதை உப்பப்பண்ணும்?
    பிசைந்த மாவனைத்தையும் (5:9)
  7. எதினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள் என்று பவுல் சொல்லுகிறார்?
    அன்பினாலே  (5:13)
  8. ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் ——————-.
    அழிவீர்கள் (5:15)
  9. ஆவிக்கேற்றபடி நடந்துகொண்டால், அப்பொழுது எதை நிறைவேற்றாதிருப்போம்?
    மாம்ச இச்சையை (5:16)
  10. மாம்சம் எதற்கு விரோதமாக இச்சிக்கிறது?
    ஆவிக்கு (5:17)
  11. நாம் ஆவியினால் நடத்தப்படுவோமானால் எதற்கு  கீழ்ப்பட்டவர்களல்ல?
    நியாயப்பிரமாணத்திற்கு (5:18)
  12. மாம்சத்தின் கிரியைகளைச் செய்கிறவர்கள் எதைச் சுதந்தரிப்பதில்லை?
    தேவனுடைய ராஜ்யத்தை (5:21)
  13. எதற்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை?
    ஆவியின் கனிகளுக்கு (5:23)
  14. ————- விரும்பாமலும், ஒருவரையொருவர் ————-, ஒருவர்மேல் ஒருவர் ————- இருக்கக்கடவோம்.
    வீண் புகழ்ச்சியை, கோபமூட்டாமலும், பொறாமைகொள்ளாமலும் (5:26)

கலாத்தியர் அதிகாரம் 6 Quiz கேள்வி பதில்

  1. ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து எதை நிறைவேற்ற வேண்டும்?
    கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை (6:2)
  2. ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால் அவன் யார்?
    தன்னைத்தானே வஞ்சிக்கிறவன் (6:3)
  3. ஆவியினாலே நித்தியஜீவனை யார் அறுப்பார்கள்?
    ஆவிக்கென்று விதைக்கிறவன் (6:8)
  4. எதை செய்கிறதில் சோர்ந்துபோகாமலிருக்க வேண்டும் ?
    நன்மை (6:9)
  5. விசேஷமாக யாருக்கு நன்மைசெய்யக்கடவோம்?
    விசுவாச குடும்பத்தார்களுக்கு (6:10)
  6. பவுல் எதை குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக என்று கூறினார்?
    கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையை (6:14)
  7. கிறிஸ்து இயேசுவுக்குள்  —————— காரியம்
    புது சிருஷ்டியே (6:15)
  8. பவுல் தன் சரீரத்திலே எதை தரித்துக்கொண்டிருக்கிறதாக கூறினார்?
    கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை (6:17)
    Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updatesதினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
Sis. Rekha

View Comments

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago