கிறிஸ்து என்றால் அபிஷேகம் பண்ணப் பட்டவர் என்று பொருள். யூத வம்சத்தில் பொறுப்புள்ள பதவிக்கு வருபவர்களை அபிஷேகம் செய்தே அமர்த்துவார்கள். ஆசாரியனையோ, ராஜாவையோ அப்படி அபிஷேகம் செய்வது வழக்கம். யூதர்கள் தங்களை சிறையிருப்பிலிருந்து மீட்டு தங்களுக்கு ஒரு தனி ராஜ்ஜியம் ஸ்தாபிக்க அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியா வருவார், அந்த மேசியாவே தங்களுக்கு கிறிஸ்துவாக இருப்பார் எனக் காத்திருந்தனர். ஆண்டவரோ பிதாவால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவாய் பூமிக்கு வந்தார். பரிசுத்த ஆவியினால் கன்னி மரியாளிடம் உருவாகிப் பிறந்த இயேசுவை (மத்தேயு 1 :18 – 25) தேவன் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணினார் ( மத்தேயு 3:: 16, 17) அபிஷேகம் பண்ணப்பட்ட இயேசுவை நாம் இயேசு கிறிஸ்து என்றழைக்கிறோம். சாஸ்திரிகள் கிறிஸ்தவர்களுக்கு ராஜா என்று ஏற்றுக்கொண்டனர். பேதுருவும் அவனுடைய நண்பர்களும் இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என அறிக்கையிட்டனர் (மத்தேயு 17 : 6 – 16) இயேசு அபிஷேகம் பண்ணப்பட்டவர் மட்டுமன்றி தம்மை விசுவாசிக்கிறவர்களில் வாஞ்சையோடு கேட்கிறவர்களைப் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணுகிறாயிருக்கிறார்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…