மத்தேயு 1 : 20 – 21 “யோசேப்பு இப்படி சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.”

“அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.”

யோசேப்பு நீதிமானாக இருந்ததால் மரியாளை அவமானப்படுத்த மனதில்லாமல் தள்ளிவிட யோசனையாயிருந்தான். அதையறிந்த கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்பிடம், உண்மையாக என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவு படுத்தினார். அவளுடைய கர்ப்பத்திலிருப்பது பரிசுத்த ஆவியினால் உண்டானது என்றார். அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக என்று கூறினார். இயேசு என்ற வார்த்தைக்கு இரட்சகர் என்று பொருள். இயேசு பாவத்திலிருந்தும், சாபத்திலிருந்தும், இரட்சி க்கிறவர். நோயிலிருந்தும், பேயிலிருந்தும், பலவீனங்களிலிருந்தும் விடுவிக்கிறவர். நம்முடைய பாவங்களுக்காக பாவ நிவர்த்தி செய்யவும், கிரயம் செலுத்தவும், நமக்கு இரட்சிப்பைச் சம்பாதித்துத் தரவும், வேண்டுமானால் மீட்பரான அவர் மானிட உருவில் வெளிப்பட வேண்டும். முற்றிலும் தெய்வத்ன்மையுள்ளவராக இருக்க வேண்டும்.. பாவமற்றவராயிருக்க வேண்டும் இயேசு ஒரு கன்னியிடம் பிறந்ததால் இவைகள் அனைத்தும் பூர்த்தியானது. இயேசு மானிடனாக அவதரிக்க ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்கவேண்டும். முற்றிலும் பரிசுத்தமுள்ளவராயிருக்க, அவர் பரிசுத்த ஆவியினால் உற்பத்தியாக வேண்டும். பரிசுத்த தேவன் அவருடைய பிதாவாக இருக்க வேண்டும். அதனால் அவர் இயற்கைக்கு அப்பாற்பட்ட தெய்வீக முறையில் பிறந்தார். அதனால் அவரிடம் இரண்டு தன்மைகள் இருந்தன. ஒன்று தெய்வீகத்தன்மை. இன்னொன்று பாவமற்ற தன்மை.

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

1 month ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

9 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

9 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

9 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

9 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

9 months ago