1. பார்வோன்: “கர்த்தரின் வார்த்தைகளைக் கேட்கிறதற்கு அவர் யார்?” என்று மனமேட்டிமையால் கூறினான் – யாத் 5:2
2. நாகமோன்: நாகமோனிடம் குஷ்டம் நீங்க எலிசா ஏழு தரம் யோர்தான் நதியில் ஸ்நானம் பண்ணச் சொன்னார். ஆனால் நாகமோன் மனமேட்டிமையால் “நான் சுத்தமாவதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப் பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும், பர்பாரும் நல்லதல்லவோ” என்றான் – 2இரா 5:12
3. உசியா: உசியா மனமேட்டிமையால் தூபங்காட்ட ஆலயத்துக்குள் பிரவேசித்தான் – 2 நாளா 26:16
4. எசேக்கியேல்: சனகெரிப் விஷயத்திலும், அவருடைய ஆயுசு நாட்களின் விஷயத்திலும் தேவன் அவனுக்கு அற்புதம் செய்தார். ஆனால் அவன் நன்றி மறந்து மனமேட்டிமையானான் – 2நாளா 32:25
5. ஆமான்: ஆமான் மொர்தகாய் தன்னை வணங்காததால் மூர்க்கம் நிறைந்தவனானான் – எஸ்தர் 3:5
6. தீருவின் அதிபதி: தீருவின் அதிபதி மனமேட்டிமையால் “தான் தேவன்” என்றான் – எசே 28:2
7. நேபுகாத்நேச்சார்: நேபுகாத்நேச்சார் மனமேட்டிமையால் “என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமை பிரதாபத்துக்கென்று, ராஜ்ஜியத்துக்கு அரமனையாக நான் கட்டிய மகா பாபிலோன் அல்லவா” என்றான் – தானி 4: 30
8. பெல்ஷாத்சார்: பெல்ஷாத்சார் மனமேட்டிமையால் தேவாலயத்தின் பாத்திரங்களில் திராட்சரசத்தை ஊற்றி தானும், தன்னுடைய மனைவியையும், வைப்பாட்டிகளையையும், பிரபுக்களையையும் அதில் குடிக்கச் செய்தான் – தானி 5:23

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago