ஏசாயா தீர்க்கதரிசி ஒரு மகிமையான தரிசனத்தைப் பார்த்தார். அந்த தரிசனத்தில் கர்த்தர் உயரமும் உன்னதுமான சிங்காசனத்தில் மேல் வீற்றிருப்பதைப் பார்த்தார். அவரடைய வஸ்திரத்தின் தொங்கலால் தேவாலயம் நிறைந்திருப்பதையும் கண்டார். ஆறு செட்டைகளுள்ள சேராபீன்கள் இரண்டு செட்டைகளால் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன்தன் கால்களை மூடி கர்த்தருக்கு மேலாக நின்று, கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர் என்று கூப்பிட்டுக் கொண்டிருப்பதையும் பார்த்தார். உடனே ஏசாயா “நான் அசுத்த உதடுள்ள மனுஷன், சேனைகளின் ராஜாவாகிய கர்த்தரை என் கண்கள் கண்டதே” என்றான். அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் ஒரு நெருப்புத்தழலைக் குறட்டால் எடுத்து ஏசாயாவின் வாயைத் தொட்டான். அதனால் ஏசாயாவின் அக்கிரமம் நீங்கி பாவம் நிவிர்த்தியானது என்றான். பின்பு “யாரை நான் அனுப்புவேன்,யார் நமது காரியமாகப் போவான்” என்று கர்த்தர் கேட்டதற்கு ஏசாயா “இதோ அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றான்.” – ஏசா 6:1-8.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…