தானியேல் தரிசனத்தில், நதிக்கரையில் ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வெள்ளாட்டுக்கடாவும் வருவதைக் கண்டான். அது வருங்கால ராஜ்ஜியங்களைக்குறித்த தரிசனமாகும். தரிசனத்தில் கண்ட இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா மேதிய, பெர்சிய தேசங்களின் ராஜாக்கள். வெள்ளாட்டுக்கடா கிரேக்க தேசத்தின் ராஜா. அதின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா. அது முறிந்துபோன போது எழும்பின கொம்புகள் என்னவென்றால் முதலாம் ராஜாவுக்குப்பின் எழும்பும் நான்கு ராஜ்ஜியங்கள். அவர்களுடைய ராஜ்ஜியபாரத்தின் கடைசிகாலத்தில் மூர்க்கமான ஒரு ராஜா எழும்புவான். அவன் பரிசுத்த ஜனங்களையும் அழிப்பான். ஆனாலும் அவன் கையினால் அல்லாமல் வேறுவிதமாய் அழிந்து போவான் – தானி 8:1 – 27
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…