கர்த்தர் ஓசியாவிடம் ஒரு சோரம்போன ஸ்திரீயையும், சோரப்பிள்ளைகளையும் அவனிடம் சேர்த்துக் கொள்ளச் சொன்னார். தேவனிடம் இஸ்ரவேலர் காண்பித்த உண்மையற்ற தன்மையை வெளிப்படுத்துவதற்காக ஒரு சோர ஸ்திரீயைத் திருமணம் செய்யத் தேவன் கட்டளையிட்டார். தேவனுக்கும் இஸ்ரவேலருக்கும் இருந்த உறவை ஓசியா கோமோரின் உறவுடன் ஒப்பிட்டு விளக்குவது ஓசியா நூலின் சிறப்பம்சமாகும். ஓசியாவின் மனைவி தன் கணவனுக்குத் துரோகம் செய்ததால் இஸ்ரவேல் நாட்டார் யெகோவாவுக்குச் செய்த துரோகத்திற்கு உவமானமானாள். எவ்வாறெனில், கோமேர் என்பவள் தன்னை நேசித்த தன் கணவரை விட்டு வேறு பலரை எப்படிச் சேர்த்தாளோ அப்படியே தேவனுக்கு உண்மையாக இருக்க வேண்டிய இஸ்ரவேலர் தன் தேவனை விட்டு அந்நிய தெய்வங்களைப் பின்பற்றினார்கள். ஆனாலும் தேவன் மனஉருக்கமுடன் இரங்கி அவர்களைச் சேர்த்துக் கொள்வார் என்பதே செய்தி – ஓசி 1:2, 3
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…