பெரும்பாடுள்ள ஸ்திரீ:
மாற்கு 5 : 25,26 “அப்பொழுது 12 வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ, அனேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளை எல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிற பொழுது,”
இயேசு யவீரு என்ற ஜெபஆலயத்தலைவனின் மகள் மரணத்தருவாயில் இருப்ப தால் அவளைக் குணமாக்க சென்று கொண்டிருக்கும் போது, திரளான ஜனங்கள் அவரை நெருக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெரும்பா டுள்ள ஸ்திரீ இயேசுவினிடத்தில் வந்தாள். பன்னிரண்டு வருஷங்களாக அந்த வியாதியோடு மிகவும் கஷ்டத்தை அனுபவித்து கொண்டிருந்தவள். தன் செல்வத் தையெல்லாம் செலவழித்தும், அனேக வைத்தியர்களைப் பார்த்தும், அந்த வியா தியிலிருந்து அவளுக்குச் சுகம் கிடைக்கவில்லை. பெரும்பாடுள்ள உதிரப் போக் கின் போது அவள் யாரையாவது தொட்டால் தீட்டாகிவிடும். அப்படிப்பட்டவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள். ஆனால் இந்தப் பெண் தன்னுடைய நோயின் கொடூரத்தினால் வெளியே வந்தாள்.
பெரும்பாடுள்ள பெண் எடுத்த தீர்மானம்:
மாற்கு 5 : 27, 28 “இயேசுவைக் குறித்து கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி; ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்.”
இந்தப் பெண் இயேசுவால் குஷ்டரோகிகள் குணமாக்கப் பட்டதையும், குருடர் களைப் பார்வையடையச் செய்ததையும், செவிடர்களைக் கேட்கச் செய்ததையும், தீராத நோய்கள் கூட இயேசுவால் குணமாக்கப் பட்டதையும் கேள்விப்பட்டி ருந்தாள். அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட யாவரும் சுத்தமானார்கள் என்ப தையும் (மாற்கு 6 : 56) கேள்விப்பட்டிருந்தாள். அவள் கேள்விப்பட்டதை நம்பி தான் தீட்டாக இருந்தாலும் இன்றைக்கு நான் இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தை யாகிலும் தொட்டு சுகமடைவேன் என்று தீர்மானம் பண்ணினாள். வியாதியின் உக்கிரமானது அவளை அவ்வாறு எண்ண வைத்தது. எனவே தடைகளை யெல்லாம் உதறித் தள்ளிவிட்டு, இயேசுவின் வல்லமையைத் தேடி ஓடி வந்தாள்.
இயேசுவைச் சுற்றி திரளான ஜனங்கள் நெருக்கிக் கொண்டிருந்த போதும், தன்னு டைய நம்பிக்கையைத் தளரவிடாமல் அந்தக் கூட்டத்துக்குள் நுழைந்தாள். யாருமறியாமல் இயேசுவின் அருகில் சென்று, இயேசுவுக்குத் தெரியாதபடி, இயேசுவிடம் எதுவும் கூறாமல் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். இயேசு வின் வஸ்திரத்தில் வல்லமையும் அபிஷேகமும் இருந்தது. வியாதியஸ்தர்கள் இயேசுவைத் தொடுவதைக் குறித்துப் பல இடங்களில் பார்க்கிறோம். அதேபோல் இயேசு வியாதியஸ்தர்களைத் தொடுவதைக் குறித்தும் வேதத்தில் பல இடங் களில் பார்க்கிறோம், இயேசு அவருடைய சரீரத்தில் நம்முடைய பாவங்களைச் சிலுவையின் மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். (1 பேதுரு 2: 24)
அந்தப் பெண் பெற்ற அற்புத சுகம்:
மாற்கு 5 :29 30 “உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்று போயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள். உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: தன் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார்.”
இயேசுவின் வஸ்திரத்தை தொட்டவுடன், அந்தப் பெண்ணின் உதிரத்தின் ஊறல் நின்றது. அந்தப் பெண் அந்த அற்புதத்தை சுதந்திரத்தாள். தெய்வீக ஆரோக் கியத்தைப் பெற்றுக் கொண்டாள். சகரியா 9 :12 ல் “இரட்டிப்பான நன்மையைத் தருவேன் இன்றைக்கே தருவேன்” என்று வாக்குப்பண்ணின கர்த்தர் அன்றைக்கே அவளுடைய நோயிலிருந்து விடுதலை கொடுத்தார். அவள் தான் ஆரோக்கிய மானதை தன் சரீரத்தில் உணர்ந்தாள். இயேசு தன்னுடைய வல்லமை தமக் குள்ளிருந்து வெளியே போனதை உணர்ந்தார். எனவே ஜனக்கூட்டத்தைத் திரும்பி பார்த்து என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார். தன் வஸ்திரங்களை யாரோ தொட்டதை இயேசு அறிந்தார். சீஷர்கள் இயேசுவிடம் இத்தனை திரளான ஜனங்கள் நெருக்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் உம்மைத் தொட்டது யார் என்று எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற கேள்வியைக் கேட்டனர் (மாற்கு 5 : 31, 32). கர்த்தர் அனைத்தும் அறிந்தவர். எபிரேயர் 4 : 13 ல் அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை என்றும், சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும், வெளியரங்கமாயும் இருக்கிறது என்றும் பார்க்கிறோம். இயேசு தன்னை தொட்டது யார் என்று பார்ப்பதற்காக ஜனங்களைச் சுற்றிலும் பார்த்தார்.
இயேசு அந்தப் பெண்ணின் பயத்தைப் போக்கினார்:
மாற்கு 5 : 33, 34 “ தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் பயந்து, நடுங்கி, அவருக்கு முன்பாக விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்கு சொன்னாள். இயேசு அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடே போய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.”
சாதாரண கூட்டத்தின் நெரிசலில் ஒருவர் தொடுவதற்கும், விசுவாசத்தினால் இயேசுவை ஒருவர் தொடுவதற்கும் வேறுபாடு உண்டு. இயேசு இதையறிந்து விட்டாரே என்று அந்தப் பெண் பயத்தில் நடுங்கினாள். தன்னுடைய சரீரத்தில் ஏற்பட்ட மாற்றத்தையும், அவள் பன்னிரண்டு வருடங்களாகத் தன் சரீரத்தில் ஏற்பட்ட வேதனைகளையும், அதற்குத்தான் எடுத்த தீர்மானத்தையும், அதனால் இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டதையும் இயேசுவிடம் கூறினாள். இயேசு எதற்காக அவளைப் பார்த்தாரென்றால், அந்தப் பெண் தான் பெற்றுக்கொண்ட உடல் சுகத்தை, அற்புதத்தை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்க முயன் றாள். ஆனால் இயேசு ஜனங்களுக்கு முன்பாக அதை அறிவிக்க வேண்டும் என்று விரும்பினார். இயேசு அவள் எடுத்த முடிவையும், அவளுடைய விசுவாசத்தை யும், செயலையும் பார்த்தார். எனவே அந்தப் பெண்ணைப் பார்த்து உன் விசுவா சம் உன்னை இரட்சித்தது என்றும், சமாதானத்தோடு போ என்றும், உன் வேதனை யெல்லாம் நீங்கி விட்டது என்றும், இனி நீ சுகமாயிருப்பாய் என்றும் கூறினார்.
விசுவாசத்தினால் தேவனிடமிருந்து நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை, இந்த அற்புதத்தின் மூலம் நாம் கற்றுக்கொள்கிறோம். எந்த நேரத்திலும் எந்த நிலைமையிலும், நாம் இயேசுவிடம் சென்றால் இயேசு நம்மை கண்ணோக்குகிறவராக இருக்கிறார். நம்பிக்கையுடன் இயேசுவை நெருங்கு வோம். இயேசுவின் அபிஷேகத்தின் வஸ்திரம் நம் மேல் விழும்படி செய்வார். 12 வருடங்களாக அவதிப்பட்ட அந்தப் பெண்ணுக்கு, அந்த நோயிலிருந்தும், அவளு டைய பயத்திலிருந்தும் இயேசு விடுதலை கொடுத்ததைப் போல,. நம்முடைய வாழ்க்கையிலும் நம்முடைய வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட நாம் இயேசுவைத் தேடிச் சென்று அதிலிருந்து விடுதலை பெறுவோம். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…