புதிய ஏற்பாடு வேத பாடம்

மீன் வலையை பற்றிய உவமை – மத்தேயு 13 : 47 – 50

பரலோக ராஜ்ஜியத்தை கடலிளிருந்து சகலவிதமான மீன்களையும் வாரிக்
கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருப்பதாக இயேசு கூறுகிறார். வலையில் இழுக்கப்பட்ட
மீன்களை நல்லவைகள் வேண்டாதவைகள் என்று பிரித்தெடுப்பார்கள். நல்லவைகளை கூடையில் சேர்ப்பார்கள். வேண்டாதவைகளைக் கடலில் தூக்கி எரிந்து விடுவார்கள்.

அதுபோல அக்கிரமக்காரர்கள் அனைவரும் முதலில் பிரித்தெடுக்கப் படுகிறார்கள். நீதிமான்கள் இரண்டாவதாக கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள். (வெளி 19 : 11 முதல் 20 : 4 வரை)

இது உபத்திரவ காலத்தின் முடிவில் நடைபெறும். (மத் 24 : 29 31 வெளி 19 : 11 – 20 : 4)
அக்கிரமக்காரர் நரகத்தில் தள்ளப்படுவர். இதிலிருந்து தேவனுடைய ராஜ்ஜியத்தில் இருக்கும் அனைவருமே தேவனுடைய உண்மையான பிள்ளைகள் அல்ல என்பதை இயேசு வற்புறுத்திக் கூறுகிறார்.

இதிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடம் என்னவெனில் தேவனது நியாயத்தீர்ப்புக்கு முன் நிறுத்தப் படுவோம் என்ற பயமும், பக்தியும் நமக்கு வேண்டும். நாம் மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக் கொண்டு பரலோகம் செல்ல ஆயத்தப்படுவோம்

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

1 month ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

9 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

9 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

9 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

9 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

9 months ago