புதிய ஏற்பாடு வேத பாடம்

இயேசு கூறிய நல்ல நண்பன் பற்றி – லூக்கா 11:5–8

ஒருவன் தன் சிநேகிதனிடத்தில் பாதிராத்திரியில் போய் அவன் வீட்டிற்கு அவனுடைய சிநேகிதன் வந்திருப்பதாகவும், அவனுக்குக் கொடுப்பதற்கு தன்னிடத்தில் ஒன்றுமில்லாததால் மூன்று அப்பங்கள் கடனாகக் கேட்டான். ஆனால் அந்த சிநேகிதன் “என்னை ஏன் இந்த ராத்திரியில் கதவும் பூட்டிய பின்னும் தொந்தரவு செய்கிறாய், என்னுடைய பிள்ளைகள்
இங்கு தூங்கிக் கொண்டிருக்கிறார்கள், அதனால் என்னால் தரமுடியாது என்றான்.

பின்பு அவன் மனந்திரும்பி அவனுக்கு சிநேகிதனாயிருந்தபடியினாலும், அவன் வருந்திக் கேட்டுக் கொண்டபடியினாலும் எழுந்திருந்து அவன் கேட்டதைக் கொடுப்பான் என்று இயேசு கூறினார். இதேபோல் உள்ளத்தில் உணர்ந்து, விடாமல் ஊக்கமாக ஜெபித்தால் நமக்குத் தேவன் நிச்சயமாக நாம் கேட்டதைத் தருவார்.

இதிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடம் நமது ஜெபம் தேவனுடைய திட்டத்தை மாற்றாது. நம்மை சரிபடுத்தி ஆயத்தப்படுத்துகின்றது.

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

4 weeks ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

9 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

9 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

9 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

9 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

9 months ago