புதிய ஏற்பாடு வேத பாடம்

இடுக்கமான வாசல் பற்றி இயேசு: மத்தேயு 7:13,14

மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் முன்பாக இரண்டு வாசல்கள், இரண்டு வழிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இடுக்கமான வாசல் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் நித்தியஜீவனைப் பெறுவர். அடுத்த வாசலும், வழியும் அவனை கேட்டுக்கு அழைத்துச் செல்லுகிறது. இந்த இரண்டில் ஒன்றைத்தான் மனிதன் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த இரண்டைத்தவிர மனிதன் கடந்து செல்லக் கூடிய வேறு வாசல்களோ, வழிகளோ வேதத்தில் சொல்லப்படவில்லை.

கிறிஸ்து என்ற வாசல்வழியாக உட்பிரவேசித்த ஒருவன் அவருடைய பாதையில் நிலைநின்று நடக்கும் போது நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்க முடியும். கேட்டுக்குப் போகிற வாசலும் விரிவானது, வழியும் விசாலமானது. அதில் பிரவேசிக்க எந்த கட்டுப்பாடும் தடையும் இல்லை. நம்முடைய மனவிருப்பத்தின்படி நடந்து கொண்டே அதற்குள் பிரவேசிக்கலாம். அதனால் தான் வேதம் சொல்லுகிறது “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.” (நீதி 14:12)

ஜீவனுக்கு போகிற வாசல் இடுக்கமும் வழி நெருக்கமுமாயிருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர் தான் என்று இயேசு போதித்தார். இதன் விளக்கம் ஒரு சிலரே உண்மையாய் மனந்திரும்பி தாழ்மையான இந்த வாசலில் பிரவேசிப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாகவும் அவருடைய வார்த்தைக்குக் கீழ்படிகிறவர்களாகவும் அவருடைய ராஜ்ஜியத்தையும், நீதியையும் ஆவலுடன் தேடுகிறவர்களாகவும் இருப்பார்கள். உண்மையான விசுவாசத்துடனும், அன்புடனும், தூய்மையுடனும், விடாமுயற்சியோடு முடிவுவரை அதைத் தொடர்ந்து பற்றிக் கொண்டிருப்பார்கள் என்றார்.

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

4 weeks ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

9 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

9 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

9 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

9 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

9 months ago