புதிய ஏற்பாடு வேத பாடம்

மன்னிக்க முடியாத பாவம் பற்றி இயேசு: மத்தேயு 12:31-37 மாற்கு 3:28-30

இயேசு பிசாசுகளைத் துரத்தியதைப் பார்த்து பரிச்சேயர் பெயல்செபூலினால் துரத்துகிறார் என்று கூறும் பொழுது, இயேசு “எந்த பாவமும், எந்த தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும். ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை” என்றார். இந்தக் காலத்திலும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு செயல்படுவதை, அந்நிய மொழியில் பேசுவதை, அற்புதங்கள் செய்வதை மறுத்துப் பேசுவதும், அதற்கு எதிராகப் பேசுவதும் அதை பிசாசின் செயல் என்று கூறுவதும் நடக்கின்றன. இது ஆவியானவருக்கு எதிராகப் பேசுவதாகும். இப்பாவத்திற்கு மன்னிப்பு கிடையாது. என்றென்றும் நித்திய தண்டனை உண்டு – மாற் 3:29 ஆவியானவரைக் குறித்துப் பேசுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆவியானவரின் குரலை எதிர்த்துப் புறக்கணிப்பவர்கள், அவர்களை பாவமன்னிப்புக்கு வழிநடத்தும் ஒரே தெய்வீக சக்தியிலிருந்து தங்களை விலக்கிக் கொள்கிறார்கள். ஆவியானவரை எதிர்க்கும் போது ஆவியின் அக்கினியை அது அவித்துப் போடும். 1தீமோ 5:19 அதனால் இருதயம் கடினமாகிறது எபி – 3:8-13

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

4 weeks ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

9 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

9 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

9 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

9 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

9 months ago