புதிய ஏற்பாடு வேத பாடம்

நாயீன் ஊர் விதவையின் மகனை இயேசு உயிரோடு எழுப்பின அற்புதம்: லூக்கா 7:11-17

இந்த உலகத்தில் தனியாக விடப்படுகிறவர்கள், விதவைகள் ஆகியோர் மேல் இயேசுவுக்கு விசேஷித்த அனுதாபமும் இரக்கமும் உண்டு. தேவன் தகப்பனற்றவர்களுக்குத் தகப்பனாகவும், விதவையின் காரியங்களை விசாரிக்கிறவருமாயும் இருக்கிறார். இயேசு ஒரு விசை நாயீன் என்னும் ஊருக்கு திரளான ஜனங்களுடன் சென்ற போது, அந்த ஊரின் வாசலை சமீபித்த போது மரித்துப்போன ஒருவனை அடக்கம் பண்ண கொண்டு வந்தனர். அவன் ஒரு விதவையின் ஒரே மகன். இயேசு கைம்பெண்ணின் ஒரே மகன் மரணமடைந்த அவல நிலையை, அந்தப் பெண் யாருமற்ற அனாதையாகிவிட்டதை இயேசு கண்டார். மரித்தவனை உயிரோடு எழுப்பும்படி யாரும் கேட்கவில்லை. இயேசு தாமாகவே மனதுருகி “அழாதே” என்றார். பாடையைத் தொட்டார். மரணமடைந்தவனை உயிரோடெழுப்பினார். பாடையைத் தொட்டால் தீட்டுப்பட நேரிடும் என்று அறிந்தும் இயேசு தொட்டார். வாலிபன் உயிரோடு எழுப்பப் பட்டதால் தீட்டுப்படவில்லை.

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்னவெனில்:  விதவைகளிடம் இயேசு அன்பு செலுத்தியது போல நாமும் திக்கற்றவர்களிடமும், அனாதைகளிடமும், விதவைகளிடமும் அன்பு செலுத்த வேண்டும். கூப்பிடாமலேயே இயேசு தானே சென்று உயிரோடெழுப்பியது போல, நாமும் துன்பத்தில், வேதனையில் இருப்பவர்களைத் தேடிச் சென்று, அவர்களுக்கு சுகம் கிடைக்க இயேசுவிடம் மன்றாடி ஜெபம் பண்ண வேண்டும்.

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago