திமிர்வாதக்காரனின் நண்பர்கள் இயேசுவினால் அவனை சுகமாக்க முடியும் என்று பூரணமாய் நம்பினார்கள். எனவே அவர்கள் அவனை எவ்வகையிலாகிலும் இயேசுவுக்கு முன்பாகக் கொண்டு வந்து சேர்க்க முயற்சித்தார்கள். அங்கு ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்தபடியால் வீட்டின் மேலேறி தட்டோடுகள் வழியாய் ஜனங்களின் மத்தியில், இயேசுவுக்கு முன்பாக அவனை படுக்கையோடு இறக்கினார்கள். அவர்களுடைய விசுவாசத்தைப் பார்த்த இயேசு “உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.” அப்பொழுது வேதபாரகரும், பரிச்சேயரும் “பாவங்களை மன்னிக்கிறதற்கு இவன் யார்?” என்றனர். அடுத்தாற்போல் இயேசு திமிர்வாதக்காரனை நோக்கி” நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு உன் வீட்டுக்குப் போ” என்றார். அவன் “நான் நடக்க முடியாமல் பல வருடங்கள் கிடக்கிறேனே, என்னால் எப்படி முடியும்” என்று கூறாமல் தேவனின் வார்த்தைக்குக் கீழ்படிந்து உடனே எழ முயற்சித்தான். வெற்றி பெற்றான்.
இதிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடம் என்னவெனில்: நோயாளியைவிட தூக்கி வந்தவர்களின் விசுவாசம் நோயாளிக்கு சுகம் கொடுத்தது அதேபோல் நாமும் விசுவாசமில்லாதவர்களையும், இயேசுவை அறியாதவர்களையும் இயேசுவண்டை அழைத்து வந்து, அவர்கள் விடுதலை பெறும் பொழுது அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாவார்கள்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…