இயேசு ஜெபஆலயத்தில் பிரவேசித்தபோது அங்கு சூம்பின கையையுடைய ஒரு மனுஷன் இருந்தான். அவன் இயேசுவைப் பார்த்து என் கையை சரியாக்கும் என்று
கேட்க வில்லை. இயேசு அந்த மனுஷனை நோக்கி “உன் கையை நீட்டு” என்றார். அவன் “என் கையோ சூம்பின கையல்லவா எப்படி நீட்ட முடியும்” என ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இயேசு கூறியவுடன் அவருடைய வார்த்தைக்குக் கீழ்படிந்து உடனே நீட்ட முயற்சித்தான். உடனே சூம்பின கையோ மறுகையைப் போல சொஸ்தமாயிற்று. பரிச்சேயர்கள் இந்த அற்புதத்தை ஓய்வுநாளில் செய்ததால் அவரைக் கொலை செய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள். இயேசு அதை அறிந்து அவர்களைப் பார்த்து, “உங்களுக்குள்ள ஒரு ஆடு ஓய்வுநாளில் குழியில் விழுந்தால் அதைப் பிடித்து தூக்கி விடமாட்டீர்களோ? அதைப் பார்க்கிலும் மனுஷன் எவ்வளவோ விசெஷித்தவன் என்றும், ஆதலால் ஓய்வுநாளில் நன்மைசெய்வது நியாயந்தான்” என்று கூறி அவ்விடத்தை விட்டுப் போனார்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…