ஏரோது யூதேயாவுக்கு ராஜாவாயிருக்கும் பொழுது அவனுடைய சகோதரனின் மனைவி ஏரோதியாள் தன கணவனை புறக்கணித்தாள், ஏரோது அவளை தனக்கு மனைவியாக்கிக் கொண்டான். ஏரோது அவளை அடைந்தது முறையானதல்ல என  யோவான்ஸ்நானகன் கடிந்து கொண்டான். இது ஏரோதுக்கு கோபத்தை ஏற்படுத்தியதால்,  ஏரோது யோவானைப் பிடித்து சிறையிலடைத்தான். யோவானைக் கொலை செய்ய அவன் நினைத்தும், யோவான் தீர்கதரிசியாய் இருந்தபடியால் ஜனங்களைக் கண்டு அஞ்சினான். ஏரோது ராஜா தன் பிறந்தநாளைக் கொண்டாடிய போது அவனுடைய மகள் விருந்தினர்களுக்கு முன்பாக நடனமாடி ஏரோதைப் பிரியப்படுத்தினாள். அவள் எதைக் கேட்டாலும் தருவேன் என்று ஏரோது வாக்குக்கொடுத்தான். அவள் அவளுடைய தாயாரான ஏரோதியாள் கூறியபடியே  யோவான்ஸ்நானகனுடைய தலையை ஒரு தாலந்தில் தருமாறு கேட்டாள். ஏரோது துக்கமடைந்தாலும் கொடுத்திருந்த வாக்கினிமித்தம், யோவானின் தலையை கொண்டுவருமாறு கட்டளையிட்டான் அதை அவள் தன் தாயினிடம் கொடுத்தாள். மத் 14:1

Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

3 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

3 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

3 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

3 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

3 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

3 months ago