இயேசு தனது முப்பதாவது வயதில் யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு வந்தார். யோவான் இயேசுவைப் பார்த்தவுடன் “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” என்றான் – யோ 1:29 யோவான் இயேசுவைப் பார்த்து தடை செய்து “நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா” என்றான். அதற்கு இயேசு
மத் 3:15 “இப்பொழுது இடங்கொடு. எப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார்.”
இயேசு பெற்ற ஞானஸ்நானம் திரித்துவத்தின் உண்மைக் கருத்தை வெளிப்படுத்துகிறது. இயேசு யோர்தானில் ஞானஸ்நானம் பெற்றது தேவனோடு சரிநிகர் சமானமாக உள்ளார் என்று வெளிப்படை
யாக அறிவிக்கப்பட ஞானஸ்நானம் பெற்றார் – யோ 10:30 மேலும் இயேசு கரையேறினவுடனே ஒரு காட்சியைப் பார்த்தார். வானம் திறக்கப் பட்டதையும், தேவஆவி புறாவைப்போல இறங்கி தம்மேல் வருகிறதையும் கண்டார். மேலும் பிதா இவரை “என்னுடைய நேசகுமாரன் என்று கூறிய சத்தத்தையும் கேட்கிறோம். பிதா தன்னுடைய குமாரன் என்று பேசுகிறார். குமாரன் ஞானஸ்நானம் பெறுகிறார். பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல் அவரிடம் இறங்கி வருகிறார். இவைகளில் திரித்துவம் செயல்படுவதைக் காண்கிறோம்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…