1. பின்மாற்றத்தினால் வரும் கசப்பு: நகோமி பெத்தலேகேமான தேவனுடைய வீட்டை விட்டு புறஜாதியாரின் பட்டணத்திற்குச் சென்றாள். தன் பிள்ளைகளுக்கு மோவாபியப் பெண்களையே மனைவியாக்கினாள். பின்மாற்றத்தினால் தன் கணவனை இழந்து, பிள்ளைகளை இழந்து சந்ததியற்றுப் போனாள். மனந்திரும்பி எருசலேமுக்கு வந்தபோது தேவன் மறுபடியும் அந்த குடும்பத்தைக் கட்டி எழுப்பினார் – ரூத் 1:5, 4 :13
2. பிசாசினால் வரும் கசப்பு: கூனி ஒருத்தி பிசாசின் கட்டினால் நிமிரமுடியாமல் கசப்புடன் வாழ்ந்தாள். இயேசுவோ அவளை அழைத்து கூனை நிமிர்த்தி கசப்பை மாற்றினார் – லூக் 13:11, 12
3. வியாதியினால் வரும் கசப்பு: எசேக்கியா ராஜா வியாதியில் இறந்து போகும் தருவாயில் இருந்த போது மனங்கசந்து தேவனை நோக்கிக் கதறினார். தேவன் அவனுடைய கசப்பை மாற்றி ஆயுசுநாட்களைக் கூட்டிக் கொடுத்தார் – ஏசா 38:5
4. வார்த்தைகளினால் கசப்பு: தாவீது ராஜாவுக்கு எதிராக சீமேயி தூஷண வார்த்தைகளைப் பேசினான். அபிசாய் அவனைக் கொலை செய்யத் தாவீதிடம் கேட்டபோது “கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். கர்த்தர் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக நன்மையைச் சரிக்கட்டுவார்” என்றான் – 2சாமு 16:11, 12 அதைக் கர்த்தர் கனப்படுத்தி சீமேயியைத் தாவீதின் பாதத்தில் விழுந்து மன்னிப்புக் கேட்கச் செய்தார் – 2சாமு 19:19, 20
5. குடும்பத்தில் கசப்பு: ஆபேலுக்கு மேல் காயீனுக்கு ஏற்பட்ட கசப்பினிமித்தம் அவன் சகோதரனாயிருந்தும் அவனைக் கொலை செய்தான் – ஆதி 4:8
6. மரணத்தினால் வரும் கசப்பு: இயேசு சவுக்கடி பட்டு சிலுவையில் இருக்கும் பொழுது கசப்பான காடியைக் கடற்காளானில் தோய்த்து அவரிடம் நீட்டினார்கள் அவரோ அதைக் குடிக்க மனதில்லாதிருந்தார். மரணம் அவருக்கு ஒரு சிறிய பிரிவு மட்டுமே கிறிஸ்து வரும்போது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் எழுந்திருப்போம் – மத் 27:34

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago