1. யாக்கோபு: ஆதி 32:26 “தூதன்: நான் போகட்டும், பொழுதுவிடிகிறது என்றார். அதற்கு யாக்கோபு: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.”
2. ரூத்: ரூத் 1:16, 17 “அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப்போவதைக் குறித்து, என்னோடே பேச வேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். நீர் மரணமடையும் இடத்திலே நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம் பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றான்.”
3. எலிசா: எலியா எடுத்துக்கொள்ளப் படும்போது எலிசா அவரை விடாமல் பெத்லகேமுக்கும், கில்காலுக்கும், எரிகோவுக்கும் அவருடன் போய் இரட்டிப்பான வரங்களைப் பெற்றுக்கொண்டான் – 2இரா 2:1 – 15
4. சூனேமியாள்: சூனேமியாளின் மகன் இறந்தவுடன் பிணத்தை வைத்துவிட்டு எலிசாவைக் கூப்பிடப்போனாள். எலிசா தன்னுடனிருந்த கேயாசியிடம் தன்னுடைய தடியைக் கொடுத்து “அந்த பிள்ளையின் முகத்தில் வை” என்றார். ஆனால் அந்தத் தாயோ ”நான் உம்மை விடுகிறதில்லையென்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றாள்.” அப்பொழுது எலிசா எழுந்திருந்து அவள் பின்னே சென்றான் – 2இரா 4:29, 30
5. யோபு: யோபு 13:15 “கர்த்தர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்;”
6. சூலமித்தியாள்: உன் 3:1 – 4 “இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்துமநேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.”
“நான் எழுந்து நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து, என் ஆத்துமா நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.” “நகரத்திலே திரிகிற காவலாளர் என்னைக் கண்டார்கள்: என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன்.”
“நான் அவர்களை விட்டுக் கொஞ்சதூரம் கடந்துபோனவுடனே, என் ஆத்துமா நேசரைக் கண்டேன்; அவரை என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன்.”
7. பவுல்: இயேசுவினிமித்தம் எந்நேரமும் நாங்கள் கொல்லப்படுகிறோம், அடிக்கப் படுகிறோம். ஆனாலும் எந்த உபத்திரமும், வியாகுலமும், துன்பமும், பசியும், நிர்வாணமும், நாசமோசமும், பட்டயமும், மரணமும், உயர்வும், தாழ்வும் எங்களை கிறிஸ்துவை விட்டுப் பிரிக்க முடியாதென்கிறார் – ரோ 8 :35 – 39

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

2 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

2 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

2 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

2 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

2 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

2 months ago