யாக்கோபு ஆரானில் ஒரு கிணற்றண்டை வந்தான். அங்கே ராகேலை சந்தித்து கிணற்றின் வாயிலிலிருந்த கல்லைப் புரட்டி ராகேலின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான். ராகேல் அதை தன் தகப்பனாகிய லாபானிடம் சொன்னான். லாபான் எதிர் கொண்டு ஓடி வந்து யாக்கோபை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். யாக்கோபு லாபானின் வீட்டில் தங்கி அவனுடைய ஆடுகளை மேய்த்தான். லாபானுக்கு லேயாள், ராகேல் என்னும் இரண்டு குமாரத்திகள் இருந்தனர். லாபான் யாக்கோபிடம் உனக்கு என்ன சம்பளம் வேண்டுமென்று கேட்டான். அதற்கு யாக்கோபு அழகாயிருந்த ராகேலின் மேல் பிரியப்பட்டு அவளுக்காக ஏழு வருடம் உம்மிடம் வேலை செய்கிறேன் என்றான். அதற்கு லாபான் சம்மதித்தான். ஆனால் லாபான் ராகேலுக்குப் பதில் லேயாளை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யாக்கோபு லாபானிடம் “ஏன் என்னை ஏமாற்றினீர்?” என்றதால் ஏழு நாட்களுக்குப் பின் லாபான் ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். அவளுக்காக யாக்கோபு மறுபடியும் ஏழு வருடம் லாபானிடம் வேலை செய்தான். யாக்கோபு தன் சகோதரனை ஏமாற்றியதால், தன் மாமனால் ஏமாற்றப்பட்டான் – ஆதி 29:1 – 31
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…