இது பாலஸ்தீனாவின் மத்தியிலிலுள்ள ஒரு பேர் பெற்ற இடம். எருசலேமிலிருந்து 12 மைல் தூரத்தில் உள்ளது. ஆபிரகாம் இங்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி தேவனை வணங்கினான். யாக்கோபு பெயர்செபாவை விட்டு ஆரானுக்கு வருகிறபோது சூரியன் அஸ்தமித்தபடியால் அங்கே இராத்தங்கி அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து தலையணையாக வைத்து படுத்துக் கொண்டான். அப்போது ஒரு சொப்பனம் கண்டான். யாக்கோபு விழித்துக் கொண்டு இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல என்றான். தன் தலையின் கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து தூணாக நிறுத்தி அந்த இடத்திற்கு பெத்தேல் என்று பெயர் வைத்தான். அதற்கு முன் அந்த இடம் லூஸ் எனப்பட்டது – நியா 1:23 பிற்பாடு சாமுவேலும் இந்த இடத்திற்கு வருவது வழக்கம். உடன்படிக்கைப் பெட்டி இங்கே இருந்தது – நியா 20:27. யெரோபெயாம் இங்கே கன்றுக்குட்டி ஒன்றை ஸ்தாபித்தான். எலியாவும் இந்த இடத்துக்கு வந்து கொண்டிருந்தார். தீர்க்கதரிசிகளின் புத்திரர்கள் இங்கே இருந்தார்கள் – 2இரா 2 :2 அசிரிய ராஜாவால் இந்த இடம் அழிக்கப்பட்ட பின்பும் இங்கே ஆசாரியர் இருந்ததாகத் தெரிகிறது – 2இரா 17:28 இப்போதும் இந்த இடம் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…