தேவன் எசேக்கியேலிடம் தலைமுடியையும், தாடியையும் சிரைக்கச் சொன்னார். பின் அந்த முடியை மூன்று பங்காக்கி, ஒரு பங்கை முற்றுகை நாட்கள் முடிகிறபோது அக்கினியால் சுட்டெரிக்கவும், ஒரு பங்கை கத்தியாலே வெட்டவும், ஒரு பங்கை காற்றில் தூவவும் கூறினார். அதில் கொஞ்சம் மாத்திரம் எடுத்து அவனுடைய வஸ்திரத்தில் முடிந்து வைக்கச் சொன்னார் – எசே 5:1 – 3
இதன் அர்த்தம் என்னவெனில் மூன்று பங்காகப் பங்கிடப்பட்ட எசேக்கியேலின் தலைமுடியும், தாடியும் எருசலேம் நகரவாசிகளின் முடிவுக்கு அடையாளம். அக்கினியால் எரிக்கப்பட்ட மூன்றில் ஒரு பாகம் பஞ்சத்தினாலும், கொள்ளை நோயாலும் இறப்பவர்களுக்கு அடையாளம். மற்றொரு பாகம் பட்டயத்தால் இறப்பவர்களுக்கு அடையாளம். மூன்றாம் பாகம் சிறைபிடிக்கப்பட்டு சிதறிப்போன மீதியானவர்களைக் குறிக்கும். உடையில் முடிந்து வைக்கப்பட்ட கொஞ்சம் முடி தேவன் பாதுகாத்து வைக்கும் மீதியான சிலரைக் குறிக்கிறது.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…