சகரியா பள்ளத்தாக்கிலே இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே சிவப்புக் குதிரையின்மேல் ஏறியிருக்கிற ஒரு புருஷனைக் கண்டான். அந்த புருஷன் இயேசுவைக் குறிக்கலாம். குதிரையின் நிறங்கள் நியாயத்தீர்ப்பையும் வெற்றியையும் குறிக்கலாம். மிருதுச்செடி இஸ்ரவேலின் உபத்திரவத்தைக் காட்டலாம். அந்த குதிரைகள் பூமி எங்கும் சுற்றிப் பார்த்து அது அமைதியையும், அமரிக்கையையும் உடையதாக இருந்ததாக ஒரு தூதன் சகரியாவிடம் கூறினான். இருப்பினும் யூதாவிலிருந்த தேவமக்கள் இன்னும் ஒடுக்கப்பட்டு பாதுகாப்பில்லாமலும் இருந்தார்கள். வளமுடன் வாழும் தீயவர்களான புறஜாதியாரின் மகிழ்ச்சி நிலையற்றது. தக்கவேளையில் கர்த்தர் அவர்களுக்குத் தகுந்த தண்டனை வழங்குவார். தேவன் இஸ்ரவேலரின் நிலைக்கு மனமிறங்கி நிலையான அமைதியை வழங்குவார். கர்த்தர் எருசலேமையும், யூதாவின் பட்டணங்களையும் மீட்டு ஆசீர்வதித்து உலக சூழ்நிலையை மாற்றுவார். எருசலேமின் ஆலயம் கட்டப்படும் என்றார் – சக 1:7 – 17
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…