சகரியா தனது தரிசனத்தில் நாலு கொம்புகளைப் பார்த்தார். இவைகள் என்ன என்று தூதனிடம் கேட்ட போது தூதன் அவைகள் இஸ்ரவேலை உபத்திரவப் படுத்தும் நான்கு அரசுகள் என்றான். அசீரியா, எகிப்து, பாபிலோன், மேதியா, பெர்சியா ஆகியோருக்கு அடையாளமாக இந்தக் கொம்புகள் காட்டப்படுகின்றன. இந்த விலங்கு கொம்புகள் புறஜாதி அரசுகளின் வல்லமையைக் காட்டுகின்றன. லூக் 21:24ல் உள்ளவை நிறைவேறும்போது இஸ்ரவேல் அந்தக் கொம்புகளின் வல்லமையிலிருந்து விடுவிக்கப்படும். இந்த கொம்புகளின் காலம் நேபுகாத்நேச்சாரின் காலம் முதல் அர்மகெதோன் போர் வரை விரிவடையும்.
பின்பு சகரியா நான்கு தொழிலாளிகளைப் பார்த்தார். இந்த நான்கு தொழிலாளர்களும் ஒன்றையொன்று அழிக்கும், மூன்று அரசுகளும், புதிதாக வரும் நான்காவது அரசுமாகும். நான்காவது அரசு மேசியாவினுடையதாக இருக்கும் – தானி 2:45 அப்போது மேசியாவின் ஆயிரம் ஆண்டு அரசாட்சி அமையும். தேவமக்களை ஒடுக்குகிற எல்லாரும் கர்த்தரது நியாயத்தீர்ப்பின்கீழ் வந்தே தீருவோம் -சக 1:18 – 21
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…