ஆதியாகமம்

கர்த்தர் அறியப்படாதவராய் நின்ற சந்தர்ப்பங்கள்

1. அறியப்படாத துரவு: ஆபிரகாமின் அடிமைப்பெண்ணான ஆகார் தன் பிள்ளை தாகத்தினால் பெயர்செபா வனாந்தரத்தில் சாகப் போகிறதைப் பார்க்க முடியாமல் தள்ளி நின்று அழுதாள். தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார். அவள் தண்ணீர் துரவைக் கண்டு பிள்ளையின் தாகத்தைத் தீர்த்தாள் – ஆதி 21:19

2. அறியப்படாத மரம்: இஸ்ரவேல் ஜனங்கள் தண்ணீரில்லாமல் மூன்று நாள் கஷ்டப்பட்டு சூர் வனாந்தரத்திலுள்ள கசப்பான தண்ணீருள்ள மாராவுக்கு வந்தனர். எனவே ஜனங்கள் முறுமுறுத்தனர். மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது கர்த்தர் அறியப்படாத மரத்தைக் காண்பித்தார். அதை வெட்டி தண்ணீரில் போட்டபோது தண்ணீர் இனிப்பானது – யாத் 15:25

3. அறியப்படாத ஆட்டுக்குட்டி: ஆபிரகாம் ஈசாக்கைப் பலியிட முற்பட்டபோது கர்த்தர் தடுத்து நிறுத்தினார். அப்பொழுது ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்த போது அறியப்படாத ஒரு ஆட்டுக்குட்டியைப் பார்த்து அதை ஈசாக்குக்குப் பதிலாக பலியிட்டார் – ஆதி 22:13

4. அறியப்படாத பலிபீடம்: பவுல் அந்தேனே பட்டணத்தில் “அறியப்படாத தேவனுக்கு” என்று எழுதியிருந்த ஒரு பலிபீடத்தைக் கண்டு, அந்த மக்களிடம் நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அந்த தெய்வத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன் என்றனர் – அப் 17:23

5. அறியப்படாத கன்மலை: இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் நாற்பது வருடங்கள் வழிநடந்தபோது, அவர்களை அறியாத ஒரு கன்மலை அவர்களைப் பின் தொடர்ந்தது – 1கொரி 10:4

6. அறியப்படாத ஏணி: யாக்கோபுக்கு தேவன் பெத்தேலில் தரிசனமாகி பூமியிலே வைக்கப்பட்டு, வானத்தை எட்டியிருந்த ஒரு ஏணியைக் காண்பித்தார். கர்த்தர் யாக்கோபுக்கு தூரமாயல்ல சமீபமாயிருப்பதையே அந்த ஏணி காண்பித்தது – ஆதி 28:12

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago