சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ அக்கினிச் சூளையில்

நேபுகாத்நேச்சார் வைத்த சிலையை சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ வணங்காததால் ராஜா கடுங்கோபங் கொண்டு இராணுவத்தில் பலசாலியான புருஷர்களை அழைத்து அவர்களைக் கட்டி மிகவும் சூடான அக்கினிச் சூளையில் போட்டனர். சூளை மிகவும் சூடாக இருந்ததால் தூக்கிக்கொண்டு போன புருஷர்களை அக்கினிஜீவாலை கொன்று போட்டது.
ஆனால் ராஜா பார்த்துக் கொண்டிருக்கும் போது அக்கினிஜீவாலைக்குள் நாலுபேர் விடுதலையாகி உலாவுவதைக் கண்டார். அந்த நாலாவது ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருந்தது. ராஜா அக்கினிச்சூளையின் வாசலண்டையில் வந்து “உன்னதமான தேவனுடைய தாசர்களே வெளியே வாருங்கள்” என்றார். அவர்கள் வெளியே வந்தபோது, அவர்களுடைய சரீரங்களில் அக்கினி சேதப்படுத்தாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடம் வீசாமல் இருந்ததை தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கண்டனர். ராஜா உடனே “இம்மூவர்களுக்கு விரோதமாகத் தூஷணவார்த்தையைச் சொல்லுகிற எந்த ஜனத்தானும், எந்த ஜாதியானும், எந்த பாஷைக்காரனும் துண்டித்துப் போடப்படுவான். அவனுடைய வீடு எருக்களமாக்கப்படும் என்றார் – தானி 3:14 – 29

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

3 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

3 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

3 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

3 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

3 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

3 months ago