இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் செய்த தவறுகளும், பெற்ற தண்டனையும் எண்ணாகமத்தில்

1. இஸ்ரவேல் ஜனங்கள் இறைச்சிக்காக முறுமுறுத்து வாதையால் செத்தார்கள் – எண் 11:30 – 35
2. மிரியாம் மோசேக்கு விரோதமாக பேசி குஷ்டரோகியானாள் – எண் 12:1 – 15
3. துர்செய்தி பரப்பின வேவுகாரர்கள் பத்து பேர் வாதையால் செத்தனர் – எண் 13:30 – 32, 14:1 – 10, 37, 38
4. கர்த்தருடைய கட்டளையை மீறி மலையுச்சிக்கு ஏறத் துணிந்தவர்களை அமலேக்கியரும், கானானியரும் துரத்தினார் – எண் 14:40 – 45
5. ஓய்வுநாளை மீறி விறகு பொறுக்கினவன் கல்லெறிந்து கொல்லப்பட்டான் – எண் 15:32 – 36
6. மோசேக்கும், ஆரோனுக்கும் விரோதமாக எழும்பிய கோராகு, தாத்தான், அபிராம் என்பவர்களை பூமி விழுங்கியது – எண் 16:1 – 34
7. ஆரோனுக்கு விரோதமாக தூபம் காட்ட எழும்பின 250 பிரபுக்களை கர்த்தருடைய அக்கினி பட்சித்துப் போட்டது – எண் 16:2, 35, 26:10
8. தேவகட்டளையை மீறி கன்மலையைப் பார்த்துப் பேசாமல் கோலினால் இரண்டு தரம் மோசே அடித்ததால் கானான் தேசத்தில் நுழைய முடியவில்லை – எண் 20 :8 – 13, 22 – 24
9. மன்னா என்னத்திற்கு என்று முறுமுறுத்ததால் கொள்ளிவாய் சர்ப்பம் கடித்து அநேகர் செத்தனர் – எண் 21: 5, 6
10. மோவாபிய ஸ்திரீகளிடம் வேசித்தனம் பண்ணியதாலும், அவர்கள் தேவர்களைப் பணிந்து கொண்டதாலும் இருபத்து நாலாயிரம் பேர் வாதையால் செத்தனர் – எண் 25:1 – 9

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago