1. இருவரும் தாவீதின் குமாரர் – மத் 1:1
2. இருவர் பெயர்களுக்கும் பொருத்தம் உண்டு. அப்சலோம் என்றால் சமாதானப்பிதா என்றோ, பிதாசமாதானமாக இருக்கிறார் என்றோ பொருள் கொள்ளலாம். இயேசு சமாதானபிரபு – ஏசா 9:6
3. இஸ்ரவேலர் அனைவருக்குள்ளும் அப்சலோமைப்போல அழகானவர்கள் இல்லை – 2சாமு 14:25, 26 வானிலும், பூமியிலும் இயேசுகிறிஸ்துவைப் போல அழகானவர் இல்லை – உன் 5:10 – 16
4. இருவர் மரணமும் வானத்துக்கும், பூமிக்கும் நடுவில் தொங்கியபடி நிகழ்கிறது. அப்சலோம் கர்வாலி மரத்திலே தொங்கியபடி யோவாபின் மூன்று ஈட்டிகள் குத்தி நிற்க, ஆயுததாரிகள் பத்துபேரால் அடித்துக் கொல்லப்பட்டார் – 2சாமு 18:9, 14, 15 இயேசுவோ ஆணிகளிள் தொங்கியபடி மடிந்தார். மடிந்தபின் ஈட்டியால் துளைத்தனர். யோவா 19:34
5. இருவரையும் நேரடி உறவினரல்லாத பிறர் அடக்கம் செய்கின்றனர் – 2சாமு 18:17, லூக் 23:50 – 53
6. இருவரும் அடையாளத்தை நிலைநாட்டிச் சென்றனர். அப்சலோம் தனக்குப் பின் செல்வாக்கு செலுத்தும் குமாரர் இல்லை என்று சோகமாக தூணை நிறுத்தினார் – 2சாமு 18:18 கிறிஸ்து தனது மரணத்தை நினைவு கூற தமது பிள்ளைகளுக்குச் சின்னங்களைக் கொடுத்துச் சென்றார் – லூக் 22:19

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago