காயீன், ஆபேல்:
ஆதாமின் பிள்ளைகள் காயீன், ஆபேல் காயீன் நிலத்தில் பயிரிடும் வேலைகளைச் செய்தான். ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனாயிருந்தான். இருவரும் கர்த்தருக்குக் காணிக்கை கொடுக்க முன்வந்தனர். இருவரும் குணங்களில் வேறுபட்டவர்களாக இருந்தனர். இதில் காயீன் துன்மார்க்க னாகவும், ஆபேல் நீதிமானாகவும் இருக்கிறான். ஆபேல் மந்தை மேய்க்கும் தொழிலைத் தெரிந்து கொண்டான். காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனாக இருந்தான் முதலில் காயீன் நிலத்தின் கனிகளைக் காணிக்கையாகக் கொண்டு வந்தான். ஆபேலும் தன் மந்தையில் உள்ள தலையீற்றில் கொழுமையான வைகளில் சிலவற்றைக் காணிக்கையாகக் கொண்டு வந்தான். அதனால் இருவரும் தேவனை மதித்தனர் என்றறிகிறோம். ஆனால் கர்த்தர் ஒருவனின் காணிக்கையை அங்கீகரித்து, ஒருவனின் காணிக்கையைப் புறக்கணித்தார். தேவன் அவ்வாறு யாரையும் புறக்கணிக்கிறவரல்ல. தேவன் இருவரையும் நேசித்தார். தன்னிடத்தில் வருகிறவர்களைப் புறம்பே தள்ளாதவர். கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் சமீபமாயிருப்பேன் என்றவர். அவர் யாரையும் புறக்கணிக்க மாட்டார்.
காணிக்கைகளைப் பற்றிய விவரம்:
வேதத்தில் காணிக்கை செலுத்த வரும்போது அர்ப்பணிப்புடனும், சந்தோஷத் துடனும் கொடுக்க வேண்டுமென்று 1 நாளாகமம் 29 : 3 லும், மனப்பூர்வமாய்க் காணிக்கை செலுத்த வேண்டுமென்று 1 நாளாகமம் 29 : 5 லும், சந்தோஷத்துடன் கொடுக்க வேண்டுமென்று 1 நாளாகமம் 29 : 9 லும், நமக்கு வருவது அனைத்தும் தேவனிடமிருந்து வருகிறதென்ற அறிவுடனும், நன்றியுடனும் கொடுக்க வேண்டுமென்று 1 நாளாகமம் 29 : 14 லும் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். சகோ தரனிடம் ஏதாவது கசப்பு இருக்குமானால் பலிபீடத்திற்கு முன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய் சகோதரனோடு ஒப்புரவான பின் காணிக்கையைச் செலுத்த வேண்டுமென்று மத்தேயு 5 : 23, 24 ல் பார்க்கிறோம். லூக்கா 21 : 1 – 4ல் இயேசு ஏழை விதவை போட்ட இரண்டு காசு காணிக்கையை அங்கீகரித்ததைப் பார்க்கிறோம். மல்கியா 1 : 13, 14 ல் எவ்விதமான காணிக்கையைக் கொண்டு வரக்கூடாதென்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். இருவரும் ஒரே குடும்பத்தின் சூழ்நிலையில் வாழ்ந்தவர்கள்தான். காயீனும் ஆபேலும் சேர்ந்து தான் காணிக் கையைக் கொண்டு வந்து தேவனைத் தொழுது கொள்ளச் சென்றனர்.
காயீன் தனக்குப் பிரியானதைத் தேவனுக்குக் காணிக்கையாகக் கொண்டு வந்தான். ஆபேல் தேவனுக்குப் பிரியமானதைக் காணிக்கையாகக் கொண்டு வந்தான். இரண்டு பேரின் உள்ளத்தையும் தேவன் பார்க்கிறார். தேவன் காணி க்கை கொண்டு வருவதற்கு முன்னே காயீனை அங்கீகரிக்கவில்லையென்று 1 யோவான் 3 : 12 ல் பார்க்கிறோம். யோவான் காயீன் பொல்லாங்கனால் உண்டானவன் என்று கூறியிருப்பதைக் காணலாம். காயீனைத் தேவன் அங்கீக ரிக்காததால் அவனுடைய காணிக்கையையும் அங்கீகரிக்கவில்லை. அவன் தன்னுடைய நிலத்தின் கனிகளை விசுவாசத்தினால் கொண்டு வரவில்லை. அவைகள் முதற் தராமானவைகள் அல்ல. தேவன் ஒவ்வொன்றையும் கவனிக் கிறார். காயீனுக்கு ஆபேலுக்குமுள்ள நடத்தையிலுள்ள வித்தியாசம் இங்கு முக்கியமல்ல. அவர்கள் கொண்டு வந்த காணிக்கையில்தான் வித்தியாச மிருந்தது. காயீனின் நீதி சுயநீதியாக இருந்தது. ஏனெனில் துன்மார்க்கனான காயீனின் பலி அருவருப்பானது என்று நீதிமொழிகளில் கூறப்பட்டுள்ளது.
ஆபேல் அவனுடைய மந்தையிலுள்ள ஒரு மிருகத்தைக் கொன்று, அதன் இரத்தத்துடன் காணிக்கையை செலுத்தினான் என்று பார்க்கிறோம். ஆபேலின் காணிக்கை விசுவாசத்துடன் கொண்டு வரப்பட்ட காணிக்கை. பழைய ஏற்பாட் டுக் காலத்தில் ஆபேல் தேவனுக்குப் பிரியமான பலியைச் செலுத்தியது போல புதியஏற்பாட்டுக் காலத்தில் நமக்குப் பிரியமான பலியாகச் சுகந்த வாசனையாக இயேசு தன்னையே சிலுவையில் ஒப்புக் கொடுத்தார். அவனுடைய இருதயத் தைத் தேவன் பார்த்தார். எபிரேயர் 11 : 4 ல் ஆபேலினுடைய காணிக்கையைக் குறித்து சாட்சி கொடுத்தார் என்று பார்க்கிறோம். ஆகவே அவன் கொண்டுவந்த காணிக்கையினால் நீதிமான் என்று பெயர் பெற்றான். கர்த்தர் ஆபேலையும் அங்கீகரித்து, அவனுடைய காணிக்கையையும் வானத்திலிருந்து அக்கினியை இறக்கி அங்கீகரித்தார். ஆனால் கர்த்தர் காயீனையும் அவனுடைய காணிக்கை யையும் அங்கீகரிக்கவில்லை (ஆதியாகமம் 4 : 2- 5).
காயீனின் கோபமும், தேவனின் வார்த்தைகளும்:
காயீனின் காணிக்கையை அங்கீகரிக்காதது தேவன். எனவே அவன் தேவன் மேல்தான் கோபப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவன் ஆபேலின் மேல் எரிச்சல் பட்டான். இதைப்பார்த்த காயீனுக்குப் பொறாமை வந்தது. அவனுடைய முகநாடி வேறுபட்டது (ஆதியாகமம் 4 : 5 – 7). இதேபோல் சவுலுக்குள் பொல்லாத ஆவி பிரவேசித்த போது, தாவீதை ஈட்டியால் குத்த முற்பட்டான். பார்வோனுக்குள் இந்த ஆவி பிரவேசித்த போது எரிச்சலுடன் இஸ்ரவேல் ஜனங்களுக்குப் பிறந்த ஆண் பிள்ளைகளை எல்லாம் நதியிலே போட உத்தரவிட்டான் (யாத்திராகமம் 1 : 22). அதே போல் இயேசுவைக் காணவந்த சாஸ்திரிகள் வேறுவழியாய்த் திரும்பிப் போனார்கள் என்பதையறிந்து ஏரோது மிகவும் எரிச்சலுடன் இரண்டு வயதுக்குட்பட்ட ஆண் பிள்ளைகளையெல்லாம் கொலை செய்தான் (மத்தேயு 2 : 16). ஏதேன் தோட்டத்திற்கு வெளியே செய்யப்பட முதல் பாவம் இது. காயீன் ஆபேல் மேல் பொறாமைப் பட்டதைப் போல, சவுல் ராஜாவுக்குத் தாவீதின் மேல் பொறாமை. பரிசேயர்கள் இயேசுவின் மேல் பொறாமை. பவுலின் மேல் மதத்தலைவர்களுக்குப் பொறாமை. வேதத்தில் முதலில் எரிச்சல், கோபம், போன்ற குணங்கள் காயீனிடமிருந்து வந்தது.
தேவனுக்கு மனப்பூர்வமாகக் காணிக்கை கொண்டு வந்தால் அதைத் தேவன் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறமாட்டார். நீதிமொழிகள் 15 : 8 ல் “துன்மார்க்கனுடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; … …” ‘என்று வேதம் கூறுகிறது. காயீனுடைய இருதயம் தேவனுக்கு முன்பாக செம்மையானதாக இல்லை ஆபேலைப் போல இரத்தப்பலியைக் கொண்டு வந்திருந்தாலும், கர்த்தர் அவனை அங்கீகரித்திருக்கமாட்டார். காயீனின் காணிக்கையில் அக்கினி வரவில்லை. காயீன் தன் காணிக்கை அங்கீகரிக்கப்படாததன் காரணத்தை ஆராய வில்லை. கர்த்தர் பேரில் எரிச்சல் அடைந்தான். அங்கீகரிக்கப்பட்டவன் மேல் பொறாமை கொண்டான். கர்த்தர் அவனிடம் உனக்கு ஏன் எரிச்சல் உண்டா யிற்று? ஏன் உன் முகம் வேறுபடுகிறது? என்று அறிவுரை அளித்தும் அவன் அதை அசட்டை செய்தான். காயீனுடைய காணிக்கை சரியாக இருந்தால் அது மேன்மையைக் கொடுத்திருக்கும். அதனால்தான் பாவமானது காயீனின் வாசற் படியில் படுத்திருந்தது. காயீன் மீண்டும் தேவனிடம் சென்று நல்ல விலங்கு ஒன்றைப் பலி செலுத்தி, தேவனால் ஏற்கப்படுவதற்கு முயற்சி செய்யவில்லை.
காயீனின் பாவம் அவனைப் பின்தொடர்ந்து வந்தது. கர்த்தர் காயீனுடைய எரிச் சலை நீக்குவதற்கு முயற்சித்தும் காயீன் ஏற்றுக்கொள்ளவில்லை. பாவத்தை மேற்கொண்டான். பாவம் வாழும் வாழ்க்கையில் வாழ்நாள் முழுவதும் போராட் டமாகத்தான் இருக்கும். வேதனை அடைந்த காயீனிடம் ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கி காணிக்கையாக்க தேவன் அறிவுரை கூறாமல் “நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ” என்றுதான் கேட்கிறார். தேவன் நீ நன்மை செய்தால் அதை இழந்துபோக வாய்ப்பில்லை என்கிறார். பலியிடுபவர் நன்மை செய்பவராக இருக்க வேண்டும் என்று தேவன் தெளிவுபடுத்துகிறார். பொறாமையால் கொலை காரனானான். இருவரில் இரத்தமில்லாத பலிகளும் தேவனுக்கு ஏற்புடையவை தான். சான்றுக்கு லேவியராகமம் இரண்டாம் அதிகாரத்தில் .போஜன பலியைப் பற்றிப் பார்க்கிறோம். ஆனால் அவிசுவாசத்திலும், தீமையிலும் உழன்றவன் என்ற நிலையில்தான் காயீனின் காணிக்கையைத் தேவன் ஏற்கவில்லை.
காயீனின் கொலையும், தேவனின் கேள்வியும்:
ஆபேலைக் காயீன் ஏமாற்றி வயல்வெளிக்குக் கூப்பிடுகிறான். ஆபேலுக்கு அவன் கூப்பிட்டபோது பகுத்தறிவு இல்லாததால், கூப்பிட்டவுடன் போனான். காயீன் ஆபேலோடு பேசினான். சர்ப்பம் ஏவாளோடு பேசும் போது சர்ப்பம் ஏன் பேசுகிறது என்று புரிந்து கொள்ளும் மனப்பான்மை இல்லாததைப் போல, ஆபேலுக்கும் நேற்றிலிருந்து காயீனின் முகநாடி சரியில்லையே, கர்த்தர் அவனுடைய காணிக்கையை அங்கீகரிக்காததால் கோபத்தில் இருக்கிறானே, என்று எண்ணாமல் அவனோடு அவனுடைய வயல்வெளிக்குப் போனான். அவனது கோபமும், ஆபேல் மேலிருந்த பொறாமையும் அவனைக் கொலை செய்ய வழிநடத்தியது. அந்த இடத்தில் காயீன் ஆபேலைக் கொலை செய்தான். சரீரத்தை மறைத்து வைத்த அவனால் இரத்தத்தை மறைத்து வைக்க முடியவில்லை. ஆபேலின் இரத்தம் பூமியில் வழிந்தோடியது. ஆபேலின் இரத்தம் தன் சகோதரனை நியாயம் விசாரிக்கக் கூப்பிடுகிறது.
ஆனால் இயேசுவின் இரத்தம் பூமியில் தன்னைக் கொலை செய்தவர்களை நியாயம் விசாரிக்கக் கூப்பிடவில்லை. மாறாகத் தன்னைக் குத்தினவர்களை மன்னிக்கும்படியாகக் கூப்பிட்டது. அது மீட்பைக் குறித்தும், இரட்சிப்பைக் குறித்தும் பேசுகிறது. கர்த்தர் ஆதாமை நோக்கி “நீ எங்கேயிருக்கிறாய்” என்று கேட்டதைப் போல காயீனிடம் ஆபேல் எங்கே என்று கேட்டதற்கு, கர்த்தரிடம் துணிந்து ஆணவமாகத் தனக்குத் தெரியாது என்று பொய் கூறினதைப் பார்க்கி றோம். அதுவுமல்லாமல் தன் சகோதரனுக்குத் தான் காவலாளியல்ல என்கிறான். காயீனுடன் வாழ்பவர்கள் அவனுக்கு எலும்பின் எலும்பும் மாம்சத்தின் மாம்சமா னவர்கள். அவர்களில் ஒருவருக்கொருவர் காவலாளிகளாக இருக்க வேண்டுமே தவிர கொலையாளிகளாகக் கூடாது (ஆதியாகமம்4 : 8 – 10). தேவனுக்கு வெளி யாக்கப்படாத மறைபொருளும் இல்லை. அறியப்படாத இரகசியமும் இல்லை என்று மத்தேயு 10 : 26 ல் பார்க்கிறோம். கர்த்தர் முதல் சாபமாக காயீனை இந்தப் பூமியில் சபிக்கப்பட்டிருப்பாய் என்றார். இரண்டாவது சாபமாக சபிக்கப்பட்ட இந்த பூமியில் காயீன் பயிரிடும்போது, அது பலனைத் தராது என்கிறார். மூன்றாவதாக நிலத்தைப் பயிரிடும்போது, அது பலனைக் கொடுக்காததால், இந்த பூமியில் நிலையற்று அலைவாயென்றார்.
கருத்து:
காயீனின் பொறாமை அவனைக் கொலைகாரனாக மாற்றியது மட்டுமல்ல, தேவனிடமிருந்து சாபத்தையும் பெற வைத்தது. இதிலிருந்து நாம் யாரிடமும், எதற்காகவும் பொறாமை கொள்ளக்கூடாது என்றறிகிறோம். நாமும் ஆவிக் குரிய வாழ்வில் உயர விரும்பினால், கர்த்தருக்குக் கனி கொடுக்க விரும்பி னால், ஊழியம் வளர வேண்டுமென்று விரும்பினால், நாம் போகிற இடமெல் லாம் ஆசீர்வாதமாக இருக்க வேண்டுமென்று விரும்பினால் பொறாமையை நம்முடைய மனதிலிருந்து முற்றிலும் அகற்றிப்போட வேண்டும். ஆமென்.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…