1. பார்வோனின் முதலாவது சமரசத் திட்டம்: யாத் 8:25 “நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு தேசத்திலேதானே பலியிடுங்கள் என்றான்.” எகிப்திலேயே ஆராதிக்க அவர்களுக்கு உரிமையைக் கொடுத்து, அப்படி இஸ்ரவேலர் செய்யும் பொழுது முழு எகிப்தியரும் இஸ்ரவேலருக்கு எதிராக எழும்ப வேண்டும் என்பது தான் அவர்களுடைய திட்டம்.
2. பார்வோனின் இரண்டாவது சமரசத் திட்டம்: யாத் 8:28 “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வனாந்தரத்தில் பலியிடும்படிக்கு, நான் உங்களைப் போகவிடுவேன்; ஆனாலும், நீங்கள் அதிக தூரமாய்ப் போகவேண்டாம்;” தூரத்தில் செல்லாமலிருந்தால், பார்வோன் அழைக்கும் போது அவர்கள் திரும்பி வரவேண்டும் என்பது அவரது திட்டம்.
3. பார்வோனின் மூன்றாவது சமரசத் திட்டம்: யாத் 10:11 “புருஷராகிய நீங்கள் போய், கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்;” புருஷர்கள் மட்டும் ஆராதனைக்குச் சென்றால் மிக விரைவில் தன் மனைவி, பிள்ளைகளைப் பார்க்க வந்து விடுவார்கள் என்பது பார்வோனின் திட்டம்.
4. பார்வோனின் நான்காவது சமரசத் திட்டம்: யாத் 10:24 “நீங்கள் போய்க் கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; உங்கள் ஆடுகளும் உங்கள் மாடுகளும் மாத்திரம் நிறுத்தப்படவேண்டும்; உங்கள் குழந்தைகள் உங்களுடன் போகலாம் என்றான்.” பலியிடுவதற்கு ஆடுமாடுகள் இல்லாமல் எப்படி பலியிடமுடியும். அந்த தந்திரத்தில் தான் பார்வோன் கூறினான். பல சமரச திட்டங்களை பார்வோன் கொண்டு வந்தும், அவைகளில் ஒன்றையும் மோசே பக்தன் ஏற்கவில்லை.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…