1. நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள் நீதிமானும், உத்தமனுமாயிருந்தான் – ஆதி 6:9

2. நோவா தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்தான் – ஆதி 6:9

3. நோவா அவன் காலத்தில் ஒரு பேழையைப் பார்க்காத போதும், ஜலப்பிரளயத்தைக் காணாத போதும், தேவனுடைய வார்த்தையின்படி பேழையை உண்டு பண்ணினான் – எபி 11:7

4. எத்தனை நாள் பேழையில் தங்க வேண்டும் என்று தெரியாவிட்டாலும், துஷ்டமிருகங்களோடு எப்படி ஜீவிப்போம் என்று தெரியாவிட்டாலும், அனைத்தையும் கர்த்தர் பார்த்துக் கொள்வார் என்று விசுவாசத்தோடு நம்பினான் – ஆதி 6:19-21

5. அங்கு எல்லா மனிதரும் துன்மார்க்கமாய் ஜீவனம் பண்ணும் போது தன் குடும்பத்துக்கு தேவபக்தியையும், கீழ்படிதலையும் கற்பித்து, அவர்களை இரட்சிப்புக்கு வழி நடத்தினான் – ஆதி 7:7

6. நோவா தேவநீதியைப் பிரசங்கித்தான் – 2பேது 2:5

7. ஜலப்பிரளயத்திலிருந்து வெளியே வந்த பின் இனி கொஞ்ச மிருகம் தானே என்று எண்ணாமல் சுத்தமான மிருகங்களிலும், பறவைகளிலும் சிலவற்றை கர்த்தருக்குப் பலி செலுத்தினான். கர்த்தரை ஆராதித்தான். சுகந்த வாசனையாக கர்த்தர் முகர்ந்தார் – ஆதி 8:15-21

8. இவைகள் அனைத்திற்கும் மேலானது நோவா கர்த்தருடைய கண்களில் கிருபை பெற்றவன் – ஆதி 6:8

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

3 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

3 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

3 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

3 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

3 months ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

3 months ago