▪ நீதி 1:8 “என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.”
▪ நீதி 1:10 “என் மகனே பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே.”
▪ நீதி 1:15 “என் மகனே தீயவர்களின் வழியில் நடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக.”
▪ என் மகனே, நீ உன் செவியைச் ஞானத்திற்குச் சாய்த்து உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும் பொருட்டு, நீ என் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு, என் கட்டளைகளைப் பத்திரப்படுத்தி, …. கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய் – நீதி 2:1 – 5
▪ நீதி 3:1 “என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது.”
▪ நீதி 3:11 “என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும் போது சோர்ந்து போகாதே.”
▪ நீதி 3:21 என் மகனே, கர்த்தருடைய ஞானத்தின் ஆழங்கள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பாயாக; மெய்ஞானத்தையும் நல்லாலோசனையையும் காத்துக்கொள்.”
▪ நீதி 4:10 “என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும்.”
▪ நீதி 4:20 “ என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய்.”
▪ நீதி 5:1, 2 “என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு உன் செவியைச் சாய்;”
▪ “அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், உன் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும்.”
▪ நீதி 5:20 “என் மகனே, நீ பரஸ்திரீயின் மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழவவேண்டியதென்ன?”
▪ நீதி 6:1, 2 “என் மகனே, நீ உன் சிநேகிதனுக்காகப் பிணைப்பட்டு அன்னியனுக்குக் கையடித்துக்கொடுத்தாயானால், நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்.”
▪ நீதி 6:3 என் மகனே, உன் சிநேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்ட படியால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்.”
▪ நீதி 6:20 “என் மகனே,உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.”
▪ நீதி 7:1 “என் மகனே, நீ என் வார்த்தைகளைக் காத்து, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து.”
▪ நீதி 19:27 “என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளை விட்டு விலகச் செய்யும் போதகங்களை நீ கேளாதே.”
▪ நீதி 23:15 “என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் முகிழும்.”
▪ நீதி 23:19 “என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து, உன் இருதயத்தை நல்வழியில் நடத்து.”
▪ நீதி 23:26 “என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.”
▪ நீதி 24:13 “என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாயிருக்கும்.”
▪ நீதி 24:21 “என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட; கலகக்காரரோடு கலவாதே.”
▪ நீதி 27:11 “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத் தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தை சந்தோஷப்படுத்து.”
▪ நீதி 31:2, 3 “என் மகனே, என் கர்ப்பத்தின் குமாரனே, என் பொருத்தனைகளின் புத்திரனே,”
▪ “ஸ்திரீகளுக்கு உன் பெலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே.”

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago