1. மோசே தண்ணீரை அடித்தான், தண்ணீர் இரத்தமாயிற்று: இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தருக்கு ஆராதனை செய்ய அனுப்பும்படி பார்வோனிடத்தில் கேட்ட போது பார்வோன் மறுத்ததால் கர்த்தர் மோசேயின் மூலம் வாதித்தார். அதில் ஒன்று மோசேயும் ஆரோனும் கோலை ஓங்கி எகிப்திலுள்ள நதியின் தண்ணீரை அடித்தனர். தண்ணீரெல்லாம் இரத்தமாயிற்று – யாத் 7:20, 21
2. எலியா தண்ணீரை அடித்தான் வெட்டாந்தரையாயிற்று: எலியா எடுத்துக் கொள்ளப்படும் முன் எலிசா அவனோடு சென்றான். அப்பொழுது எலியாவும், எலிசாவும் யோர்தான் கரையில் நின்றனர். அப்பொழுது எலியா தன் சால்வையை எடுத்து முறுக்கி தண்ணீரை அடித்தான். தண்ணீர் இருபக்கமும் பிரிந்தது. அவர்கள் இருவரும் உலர்ந்த தரை வழியாய் அக்கரைக்குப் போனார்கள் – 2இரா 2:8
3. எலிசா தண்ணீரை அடித்த போது தண்ணீர் பிளந்தது: எலியா சுழல்காற்றில் பலோகத்திற்கு ஏறிப்போவதைப் பார்த்த எலிசா “இஸ்ரவேலுக்கு இரத்தமும் குதிரை வீரருமாயிருந்தவரே” என்று புலம்பி எலியாவின் மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து “எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே?” என்று சொல்லித் தண்ணீரை அடித்தான். அதனால் தண்ணீர் இரு பக்கமாப் பிரிந்தது எலிசா இக்கரைப்பட்டான் – 2இரா 2:14
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…