செருபாபேலோடு சேர்ந்து 49897 பேர் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள். ஆசாரியர்களும் செருபாபேலோடு திரும்பிச் சென்றார்கள். ஜனங்கள் எருசலேமில் குடியேறி ஏழு மாதங்கள் சென்றபின் ஒன்றாய் கூடி பலிபீடத்தைக் கட்டினார்கள். பலிகள் தொடரப்பட்டது. ஆலய அஸ்திபாரம் போடப்படவில்லை. எருசலேமுக்கு வந்து இரண்டு வருடம் இரண்டு மாதம் சென்றபின் கோரேஸ்ராஜாவின் கட்டளைப் படி செருபாபேலும், யோசுவாவும் மற்றும் அநேகரும் சேர்ந்து ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட ஆரம்பித்தார்கள். மகாசத்தமாய்த் துதித்துப் பாடினார்கள். ஆவியானவரால் ஏவப்பட்டபடி ஜனங்களை உற்சாகப்படுத்தி வேலை வாங்கினார்கள். செருபாபேல் தான் தொடங்கிய ஆலயம் கட்டும் பணியைத் தானே நிறைவேற்றும் கிருபையைத் தேவனிடமிருந்து பெற்றார் – எஸ்றா 2:1 – 70, 3:1 – 13, 5:2, நெகே 12:1 – 26
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…