படங்களுக்குமுன்பாக மெழுகுவர்த்தி கொளுத்துவது, சிலைகள், படங்களுக்கு மாலையிடுவது, பூச்சூட்டுவது, பத்தி கொளுத்துவது, பொட்டுவைப்பது, தேங்காய் உடைப்பது, ஆகாரம் படைப்பது, பலியிடுவது, சூடன் கொளுத்துவது, தூபவர்க்கம் காண்பிப்பது, சிலைகளுக்கு முன்பாகக் குனிவது, முழங்கால்படியிடுவது, அவற்றைத் தொட்டு முத்தமிடுவது, கைகூப்புவது போன்றவை தவறுதலாகும் – அப் 15:28, 1கொரி 10:19 – 22, வெளி 2:20 வாகனங்கள், தொழில் செய்யும் இடத்திலிலுள்ள பொருட்களுக்கு பொட்டு வைத்து வணங்குதல், முட்டை உடைத்தல், எலுமிச்சைபழத்தை நசுக்குதல், பூசனிக்காய் உடைத்தல் போன்றவையும் விக்கிரக ஆராதனைகள். ஆயுதபூஜைக்கும், பிற சடங்குகளுக்கு பணம் தருவதும் கிறிஸ்தவர்கள் செய்யத் தகாததாகும். தேரிழுத்தல், சப்பரம் சுமத்தல் போன்றவையும் வேதத்தில் கூறப்படாத வழக்கங்களாகும். இது தவிர வாழ்க்கையில் கர்த்தருக்குக் கொடுக்கவேண்டிய இடத்தை வேறு எதற்காகிலும் அல்லது யாருக்காகிலும் கொடுத்தால் அது சிலைவழிபாட்டிற்கு சமமாகும். ஒருவன் தன் மனைவியையோ, தொழிலையோ தேவனைவிட அதிகமாக நேசித்தால் சிலை வழிபாடாகும். செய்யும் தொழிலே தெய்வமல்ல கர்த்தரே தெய்வம்.

Sis. Rekha

Recent Posts

சிலுவையின் நன்மை

முன்னுரை: 1 கொரிந்தியர் 1 : 18 “சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப் போகிறவர் களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது…

3 months ago

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

10 months ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

10 months ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

10 months ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

10 months ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

10 months ago