சரீர மரணம் என்பது மனிதனின் சரீரத்திலிருந்து உள்ளான மனிதனான ஆவி ஆத்துமா பிரிவதாகும் – லூக் 12:20 இதையே நாம் மரணம் என்கிறோம். தமது கட்டளையை மீறினால் அன்றே மரணமடைவான் என்று தேவன் ஆதாமைப் பார்த்துக் கூறியது தேவனிடமிருந்து பிரிக்கப்படும் ஆத்தும மரணத்தைக் குறிப்பதாகும் – ஆதி 2:17 ஆதாம் பாவம் செய்த நாளில் அது நிறைவேறிற்று. அந்நாளிலிருந்து தேவன் ஆதாமோடு உலாவுவதற்கு வரவில்லை. ஆதாம் பாவம் செய்த பின்னரே “நீ மண்ணாயிருக்கிறாய் நீமண்ணுக்குத் திரும்புவாய்” என்று தேவன் கூறினார் – ஆதி 3:19 இதன்படி ஆதாம் 930 வது வயதில் சரீர மரணமடைந்தார் – ஆதி 5 :5 மனிதனின் சரீரம் மட்டுமே மண்ணாலானது. எனவே அது மண்ணுக்குத் திரும்பும். ஆவி ஆத்துமாவான உள்ளான மனிதன் மண்ணுக்குத் திரும்புவதில்லை.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…
View Comments
உங்களுடைய வேதாக பாடம் தெளிவாக விளங்குகின்றது . உங்களுடைய வட்சப் க்றூப்பில் என்னையும் இணைத்துக் கொள்ள முடியுமா
அருமை