சகரியாவுக்குத் தேவன் பொன்குத்துவிளக்கையும், இரண்டு ஒலிவமரங்களையும் காட்டினார். குத்துவிளக்கு இயேசுவையும், அதன் எண்ணெய் நிறைந்த தன்மை ஆவியானவரின் நிறைவையும் காட்டும். ஒருவன் தேவனது கிரியையை மனித பலத்தில் செய்ய முடியாது. ஆவியானவரின் உதவியால் மட்டுமே தேவபணியைச் செய்ய முடியும். நம்மூலமாகக் கிரியை செய்யும் ஆவியானவரின் வல்லமையால் மலை போல் பெரிதாய்த் தோன்றும் கஷ்டங்களை கூட நாம் எளிதாய் மேற்கொள்ளலாம். தேவமக்களுக்கு தேவனின் பணிக்கும், ஆவிக்குரிய பிரச்சனைகளுக்கும் ஆவியானவரின் வெளிப்பாடுகள் இல்லாவிட்டால் எதிர்ப்புகள் அவர்களை மேற்கொண்டுவிடும். ஆவியானவரது வல்லமையாலும், ஆசீர்வாதத்தாலும் செய்யப்படும் எந்த வேலையும் அற்பமானது அல்ல. அதற்கு மதிப்பும், முக்கியத்துவமும் உண்டு. சகரியா பார்த்த இரண்டு ஒலிவமரங்கள் இஸ்ரவேலின் ஆசாரிய, அரசபதவிகளைக் காட்டும். இத்தகைய இரு பதவிகளையும் ஒருங்கே பெற்ற ராஜரிக ஆசாரியைக் கூட்டமான நாம் ஆவியானவரின் நிறைவில் பலத்த காரியங்களை நடப்பிக்கும் சாட்சிகளாகவாழ அழைக்கப் படுகிறோம் – சக 4:1-14

Sis. Rekha

Share
Published by
Sis. Rekha

Recent Posts

யெரொபெயாம்

யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…

1 month ago

பிலிப்பு

சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…

1 month ago

ஸ்தேவான்

இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…

1 month ago

ஆயிர வருட அரசாட்சி

கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…

1 month ago

வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு

வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…

1 month ago

அர்மகெதோன் போர்

அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…

1 month ago