மரக்காலில் அமர்ந்திருக்கிற ஓரு ஸ்திரீயை சகரியா பார்க்கிறான். இந்த ஸ்திரீ விக்கிரக ஆராதனைக்கும், எல்லாவித துன்மார்க்கத்துக்கும் அடையாளம். அவள் அந்த மரக்காலில் சிறைபட்டு கனமுள்ள ஈய மூடியால் மூடப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டாள். பாபிலோன் சாத்தானின் ஆதிக்கத்திலுள்ள தேவனற்ற உலக அமைப்பைக் குறிக்கிறது. தேவனது ஜனங்களில் காணப்பட்ட துன்மார்க்கர் தண்டிக்கப்படுவது மட்டுமல்லாமல் தேசத்திலிருந்து நீக்கப்படுவதும் வேண்டியதாயிருந்தது. உலகிலுள்ள தீய வியாபாரங்களுக்கு முடிவுகட்டும் நாள் விரைவில் வரும். இந்த இரண்டு ஸ்திரீகளைக் கொண்டுபோய் வீடுகட்டிக் கொடுத்தாலும், நிலைப்படுத்தினாலும், மத, வாணிபம், அரசியல்சார்ந்த உலக அமைப்பு அழிக்கப்படுவது உறுதி. வெளிப்படுத்தின விசேஷத்தில் சிநேயார் தேசத்தில் இருக்கும் வியாபார வீடு அழிக்கப்படுவதைப் பார்க்கிறோம் – வெளி 17, 18, சக 5:5 – 11
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…