கானானை வேவுபார்க்கச் சென்ற 12 பேரில் காலேபும், யோசுவாவும் தைரியத்தோடு அந்த தேசத்தை எளிதாய் ஜெயித்து விடலாம் என்றார்கள். மற்ற பத்து பேரும் “அங்கே இராட்சதர்களைப் பார்த்தோம், அவர்கள் முன் வெட்டுக்கிளிகளைப் போல இருந்தோம் என்றார்கள்.” ஜனங்கள் பயந்து அவர்கள் வார்த்தைக்குச் செவி கொடுத்து கலகம் பண்ணினார்கள். கர்த்தர் அந்த ஜனத்தை அழித்து விட சித்தமாயிருந்தார். மோசே ஜனங்களுக்காக பரிந்து பேசினான். ஆனாலும் கோபமுண்டாக்கியவர்கள் யாவரும் அந்த தேசத்தைக் காணமாட்டார்கள் என்றார். அவர்களுடைய அவநம்பிக்கை அவர்களுக்கு அழிவைத் தந்தது – எண் 14:1-24. அதற்கு கர்த்தர் என்ன சாபம் கொடுத்தாரென்றால் நாற்பது நாட்களுக்குப் பதிலாக நாற்பது வருடங்கள் வனாந்தரத்தில் சுற்றித் திரிய வேண்டுமென்றும் இந்த சந்ததியில் யோசுவாவையும், காலேபையும் தவிர மற்றவர்கள் (இருபது வயதுக்குட்பட்டவர்கள்) வனாந்தரத்தில் மடிவார்கள் என்றும் சபித்தார் – எண் 14:25-38, உபா 1:34-40. நாம் அடையும் அழுகை, வேதனைகள் அவிசுவாசத்தால் தான் ஏற்படுகின்றன.
யெரொபெயாமின் தந்தையின் பெயர் நோவா. தாயின் பெயர் செரூகாள் (1 இராஜாக்கள் 11 : 26). இவனுக்கு இரண்டு குமாரர்கள்…
சபையில் வந்த பிரச்சனை: வேதத்தில் 4 நபர்கள் பிலிப்பு என்ற பெயரில் உள்ளனர். இதில் கூறப்போகிற பிலிப்பு இயேசுவின் சீஷனான…
இயேசு மரித்து உயிர்த்தெழுந்து பரமேறிய பின் பெந்தேகொஸ்தேநாளில் மேல்வீட்டரையில் 120 பேர் கூடியிருந்த போது பரிசுத்த ஆவியானவர் வல்ல மையாக…
கிறிஸ்து அவருடைய இரண்டாம் வருகையைத் தொடர்ந்து இவ்வுலகில் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுவார். ஆயிரம் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 20 :…
வெள்ளை சிங்காசனத்திற்கு முன் நடப்பது: வெளிப்படுத்தல் 20 : 11 “ பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல்…
அர்மகெதோன் போர் நடக்கும் இடம்: அர்மகெதோன் என்ற வார்த்தை வெளிப்படுத்தல் 16 : 16 ல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அர்மகெதோன்…